அதிபத்தர்
அப்பூதியடிகள்
அமர்நீதி நாயனார்
அரிவாட்டாய நாயனார்
ஆனாய நாயனார்
இசைஞானியார்
இடங்கழி நாயனார்
இயற்பகை நாயனார்
இளையான்குடிமாறார்
உருத்திரபசுபதி நாயனார்
எறிபத்த நாயனார்
ஏயர்கோன் கலிகாமர்
ஏனாதி நாதர்
ஐயடிகள் காடவர்கோன்
கணநாதர்
கணம்புல்லர்
கண்ணப்பர்
கலிய நாயனார்
கழறிற்றறிவார்
கழற்சிங்கர்
காரி நாயனார்
காரைக்கால் அம்மையார்
குங்கிலியகலையனார்
குலச்சிறையார்
கூற்றுவர் ( சேரமான் பெருமான் )
கலிக்கம்ப நாயனார்
கோச்செங்கட் சோழன்
கோட்புலி நாயனார்
சடைய நாயனார்
சண்டேசுவர நாயனார்
சத்தி நாயனார்
சாக்கியர்
சிறப்புலி நாயனார்
சிறுதொண்டர்
சுந்தரமூர்த்தி நாயனார்
செருத்துணை நாயனார்
சோமசிமாறர்
தண்டியடிகள்
திருக்குறிப்புத் தொண்டர்
திருஞானசம்பந்தமூர்த்தி
திருநாவுக்கரசர்
திருநாளை போவார்
திருநீலகண்டர்
திருநீலகண்ட யாழ்ப்பாணர்
திருநீலநக்க நாயனார்
திருமூலர்
நமிநந்தியடிகள்
நரசிங்க முனையர்
நின்றசீர் நெடுமாறன்
நேச நாயனார்
புகழ்ச் சோழ நாயனார்
புகழ்த்துணை நாயனார்
பூசலார்
பெருமிழலைக் குறும்பர்
மங்கையர்க்கரசியார்
மானக்கஞ்சாற நாயனார்
முருக நாயனார்
முனையடுவார் நாயனார்
மூர்க்க நாயனார்
மூர்த்தி நாயனார்
மெய்ப்பொருள் நாயனார்
வாயிலார் நாயனார்
விறன்மிண்ட நாயனார்
தில்லை வாழ் அந்தணர்
பொய்யடிமையில்லாத புலவர்
பத்தராய்ப் பணிவார்கள்
பரமனையே பாடுவார்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்
திருவாரூர்ப் பிறந்தார்
முப்போதும் திருமேனி தீண்டுவார்
முழுநீறு பூசிய முனிவர்
அப்பாலும் அடிசார்ந்தார்

விறன்மிண்ட நாயனார் - Viranmeenda Nayanar

Guru poosai: சித்திரை - திருவாதிரை


"விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்"
– திருத்தொண்டத்தொகை

மணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவன் இறைவன். அவன் திருவடிகளை வேண்டிப் பரசு என்னும் ஆயுதம் பெற்றவன் பரசுராமன். அவனது நாடு மலைநாடு எனப்படும் சேரநாடு. கடலில் விளைந்த முத்து, கரும்பில் விளைந்த முத்து, மூங்கிலில் விளைந்த முத்து, யானைத் தந்தத்தில் விளைந்த முத்து, இவற்றை முத்துப் போன்ற சிரிப்பினை உடைய மகளிர் கோத்தனர். அத்தகு வளமுடைய சேரநாட்டு ஊர்களில் சிறந்ததும், தொன்மையானதுமான ஊர் செங்குன்றூர். அவ்வூரில் வேளாண் குலத்தில் தோன்றியவர் விறன்மிண்டர். சிவபெருமானின் கழல்களைப் பற்றிக் கொண்டவர். வேறு பற்றுக்களைப் பற்றாதவர். பல்வேறு தலங்களையும் சென்று வழிபட்டார். 

முதிரும் அன்பில் பெருந்தொண்டர் முறைமைநீடு திருக்கூட்டத்தாராகிய அடியார்களையும் தொழுதார். அருவி வீழும் மலைநாடு கடந்து சோழநாட்டுத் திருவாரூர் சேர்ந்தார். திருவாரூர்ப் பூங்கோயில் தேவாசிரிய மண்டபத்தில் சிவனடியார் பலர் கூடியிருந்தனர். இறைவனை வழிபட வந்த சுந்தரர் அடியவர்களைத் தொழாமல் உள்புகுந்தார். அதனைக் கண்ட விறன்மிண்டர் சுந்தரரைப் புறகு (புறம்பானவர்) என்றார். அடியார்கள் தம்பிரான் தோழர் இவர் என்றனர். பிறைசூடிய பெருமானுக்கும் புறகு என்றார். அதனைக் கேட்ட சுந்தரர் உலகம் உய்யவும், நாம் உய்யவும், சைவ நன்நெறியின் ஒழுக்கம் உய்யவும் திருத்தொண்டத்தொகை பாடி அருளினார். விறன்மிண்டர் நெடுநாட்கள் இவ்வுலகில் வாழ்ந்து சைவநெறி போற்றித் தொண்டு புரிந்தார். இறைவனது கணங்களுக்குத் தலைவராகும் பேற்றினை இறுதியில் பெற்றார்.


 

Back to Top