மூலம்:
981 . கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
பரிமேழலகர் உரை:
கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு -
நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை
மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன்
என்ப - நல்லனவாய குணங்கள் எல்லாம்
இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர்.
(சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன
செய்துகொண்டனவாய வழியும், சான்றாண்மை
என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர்
இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு
கூறுவர் என்பதாம்.) ---
மு.வ உரை:
கடமை இவை என்று அறிந்து சான்றாண்மை மேற்கொண்டு
நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.
G.U.Pope:
All goodly things are duties to the men, they say
Who set themselves to walk in virtue's perfect way.
Explanation
It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.
மூலம்:
982 . குணநலம் சான்றோர் நலனே: பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
பரிமேழலகர் உரை:
சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது
குணங்களானாய நலமே; பிற நலம் எந்நலத்தும்
உள்ளது அன்று - அஃது ஒழிந்த உறுப்புக்களானாய
நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று.
(அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப்
புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப்பிறப்பும்
கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள்
புகுதாமையின், எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும்
கூறினார். இவை இரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற
குணங்கள் பொதுவகையான் கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவருடைய பண்புகளின்
நலமே; மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
G.U.Pope:
The good of inward excellence they claim,
The perfect men; all other good is only good in name.
Explanation
The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.
மூலம்:
983 . அன்புநாண் ஓப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
பரிமேழலகர் உரை:
அன்பு - சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும்
உளதாய அன்பும்; நாண் - பழி பாவங்களின் நாணலும்;
ஒப்புரவு - யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும்;
கண்ணோட்டம் - பழையார்மேல் கண்ணோடலும்;
வாய்மையொடு - எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும்
என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சால்பு என்னும்
பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து.
(எண் 'ஓடு' முன்னவற்றோடும் கூடிற்று.
இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின்,
இவற்றைத் 'தூண்' என்றார். ஏகதேச உருவகம்.) ---
மு.வ உரை:
அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து
பண்புகளும் சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
G.U.Pope:
Love, modesty, beneficence, benignant grace,
With truth, are pillars five of perfect virtue's resting-place.
Explanation
Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.
மூலம்:
984 . கொல்லா நலத்தது நோன்மை: பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
பரிமேழலகர் உரை:
நோன்மை கொல்லா நலத்தது - பிற அறங்களும்
வேண்டுமாயினும், தவம் ஓர் உயிரையும் கொல்லாத
அறத்தின் கண்ணதாம்; சால்பு பிறர் தீமை சொல்லா
நலத்தது - அது போலப் பிற குணங்களும்
வேண்டுமாயினும் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத
குணத்தின் கண்ணதாம்.
(நலம் என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டனையும்,
தலைமை தோன்ற, இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக்
கூறினார். தவத்திற்குக் கொல்லா வரம்
சிறந்தாற்போலச் சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாக்
குணம் சிறந்தது என்பதாம்.) ---
மு.வ உரை:
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக்
கொண்டது; சால்பு பிறருடைய தீமையை எடுத்துச் சொல்லாத
நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.
G.U.Pope:
The type of 'penitence' is virtuous good that nothing slays;
To speak no ill of other men is perfect virtue's praise.
Explanation
Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.
மூலம்:
985 . ஆற்றுவார் ஆற்றல் பணிதல்: அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
பரிமேழலகர் உரை:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் - ஒரு கருமத்தைச்
செய்து முடிப்பாரது ஆற்றலாவது, அதற்குத்
துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக் கொள்ளுதல்;
சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது - இனிச்
சால்புடையார் தம் பகைவரைப் பகைமையொழிக்கும்
கருவியும் அதுவே.
(ஆற்றல், அது வல்லராந்தன்மை. இறந்தது தழீஇய
எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. சால்பிற்கு ஏற்ற
பணிதற் குணத்தது சிறப்புக் கூறுவார், ஏனையதும்
உடன் கூறினார்.) ---
மு.வ உரை:
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும். அது
சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற
கருவியாகும்.
G.U.Pope:
Submission is the might of men of mighty acts; the sage
With that same weapon stills his foeman's rage.
Explanation
Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes.
மூலம்:
986 . சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
பரிமேழலகர் உரை:
சால்பிற்குக் கட்டளை யாது எனின் - சால்பாகிய
பொன்னின் அளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது
எனின்; தோல்வி துரை அல்லார் கண்ணும் கொளல் -
அது தம்மின் உயர்ந்தார் மாட்டுக் கொள்ளும்
தோல்வியை இழிந்தார் மாட்டும் கோடல்.
(துலை - ஒப்பு. எச்ச உம்மையான் இருதிறத்தார்
கண்ணும் வேண்டுதல் பெற்றாம். கொள்ளுதல் -
வெல்லும் ஆற்றலுடையராயிருந்தே ஏற்றுக்
கொள்ளுதல். இழிந்தாரை வெல்லுதல் கருதித்
தம்மோடு ஒப்பித்துக் கொள்ளாது, தோல்வியான்
அவரினும் உயர்வராயின், அதனால் சால்பளவு
அறியப்படும் என்பதாம்.) ---
மு.வ உரை:
சால்புக்கு உரைகல்போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு
ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும் தோல்வியை ஏற்றுக் கொள்ளும்
பண்பாகும்.
G.U.Pope:
What is perfection's test? The equal mind.
To bear repulse from even meaner men resigned.
Explanation
The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.
மூலம்:
987 . இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு?
பரிமேழலகர் உரை:
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் -
தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார்
இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது
- அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து? சிறப்பு
உம்மை அவர் இன்னா செய்தற்கு இடனாதல் விளக்கி
நின்றது. ஓகாரம், அசை, வினா, எதிர்மறிப் பொருட்டு.
தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு
பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும்
சிறப்பு வகையால் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச்
செய்யாவிட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்?
G.U.Pope:
What fruit doth your perfection yield you, say!
Unless to men who work you ill good repay?
Explanation
Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?
மூலம்:
988 . இன்மை ஒருவற்கு இளிவுஅன்று சால்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
பரிமேழலகர் உரை:
சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு
என்று சொல்லப்படும் வலி உண்டாகப் பெறின்;
ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு
நல்குரவு இளிவாகாது
(தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான்
வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார்
சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார்
என்பதாம்.) சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் -
சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று
சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெரார் -
ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும்
தாம் திரியார். (சான்றாண்மையது பெருமை தோன்ற
அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு
நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார்.
''பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ'' (புறநா. 350)
என்றார் பறிரும். ஏகதேச உருவகம்.) ---
மு.வ உரை:
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப்
பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
G.U.Pope:
To soul with perfect virtue's strength endued,
Brings no disgrace the lack of every earthly good.
Explanation
Poverty is no disgrace to one who abounds in good qualities.
மூலம்:
989 . ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
பரிமேழலகர் உரை:
சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார்-
சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று
சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார்-
ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந் திரிந்தாலும்
தாம் திரியார்.
(சாண்றாண்மையது பெருமை தோன்ற அதனைக்
கடலாக்கியும். அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின்
அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார்.
"பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ" (புறநா. 330)
என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.) ---
மு.வ உரை:
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப் படுகின்றவர்,
ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல்
இருப்பர்.
G.U.Pope:
Call them of perfect virtue's sea the shore,
Who, though the fates should fail, fail not for evermore.
Explanation
Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.
மூலம்:
990 . சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்
தாங்காது மன்னோ பொறை.
பரிமேழலகர் உரை:
சான்றவர் சான்றாண்மை குன்றின் - பல
குணங்களானும் நிறைந்தவர் தம் தன்மை
குன்றுவராயின்; இரு நிலந்தான் பொறை தாங்காது -
மற்றை இரு நிலத்தானும் தன் பொறையைத்
தாங்காதாய் முடியும்.
('தானும்' என்னும் எச்சவும்மை விகாரத்தால்
தொக்கது. அவர்க்கு அது குன்றாமையும் அதற்கு அது
தாங்கலும் இயல்பாகலான் அவை எஞ்ஞான்றும்
உளவாகா என்பது தோன்ற நின்றமையின், மன்
ஒழியிசைக்கண் வந்தது ஓகாரம் அசை. இதற்கு 'இரு
நிலம் பொறை தாங்குவது சான்றவர் துணையாக
வருதலான், அதுவும் அது தாங்கலாற்றாது' என்று
உரைப்பாரும் உளர் இவை மூன்று பாட்டானும்
அவற்றான் நிறைந்தவரது சிறப்புக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய
நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய்விடும்.
G.U.Pope:
The mighty earth its burthen to sustain must cease,
If perfect virtue of the perfect men decrease.
Explanation
If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden.