மூலம்:
961 . இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
பரிமேழலகர் உரை:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத
வழித்தாம் அமையாத சிறப்பினை
உடையவேயெனினும்; குன்ற வருப விடல் - தம்
குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக.
(அமையாமை - இறத்தல். 'குடிபிறப்பு' என்பது
அதிகார முறைமையான் வந்தது. 'இறப்பவரும் வழி
இளிவந்தன செய்தாயினும் உய்க' என்னும் வடநூல்
முறையை மறுத்து, உடம்பினது
நிலையின்மையையும், மானத்தினது
நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க
என்பதாம்.) ---
மு.வ உரை:
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும்,
குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல்
விடவேண்டும்.
G.U.Pope:
Though linked to splendours man no otherwise may gain,
Reject each act that may thine honour's clearness stain.
Explanation
Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.
மூலம்:
962 . சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
பரிமேழலகர் உரை:
சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும்
தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்;
சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே
மானத்தை நிறுத்துதலை விரும்புவார்.
(எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான்
உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது.
நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார்
என்பதாம்.) ---
மு.வ உரை:
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தேடும்
வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச்
செய்யமாட்டார்.
G.U.Pope:
Who seek with glory to combine honour's untarnished fame,
Do no inglorious deeds, though men accord them glory's name.
Explanation
Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.
மூலம்:
963 . பெருக்கத்து வேண்டும் பணிதல்: சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
பரிமேழலகர் உரை:
சுருக்கத்து வேண்டும் உயர்வு. (பணியாமை தாழ்வு
வாராமற் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல்.
செல்வக்காலை அஃது உயர்ச்சி செய்யத் தாம்
தாழ்தலும், அல்லற்காலை அது தாழ்வுசெய்யத் தாம்
உயர்தலும் வேண்டும என்பதாம். இவை மூன்று
பாட்டானும் தாம் தாழ்தற்கு ஏதுவாயின செய்யாமை
சிறப்புக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பணிவு வேண்டும்.
செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத
உயர்வு வேண்டும்.
G.U.Pope:
Bow down thy soul, with increase blest, in happy hour;
Lift up thy heart, when stript of all by fortune's power.
Explanation
In great prosperity humility is becoming; dignity, in great adversity.
மூலம்:
964 . தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
பரிமேழலகர் உரை:
மாந்தர் - குடிப்பிறந்த மாந்தர்; நிலையின்
இழிந்தக்கடை - தம் உயர்ந்த நிலையைவிட்டு
அதனினின்றும் தாழ்ந்த வழி; தலையின் இழிந்த மயிர
அனையர் - தலையை விட்டு அதனின்றும் வீழ்ந்த
மயிரினை ஒப்பர்.
(அந்நிலையை விடாது நின்றவழிப் பேணப்படுதலும்,
விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற்
பெற்றாம்.) ---
மு.வ உரை:
மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது,
தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.
G.U.Pope:
Like hairs from off the head that fall to earth,
When fall'n from high estate are men of noble birth.
Explanation
They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.
மூலம்:
965 . குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
பரிமேழலகர் உரை:
குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல
உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனய செயின்
குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு
குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர்.
('குன்றியனையவும்' என்னும் இழிவு சிறப்பு உம்மை
விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய
செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.) -
--
மு.வ உரை:
மலைபோல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்குக்
காரணமான செயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும்
தாழ்ந்து போய்விடுவர்.
G.U.Pope:
If meanness, slight as 'abrus' grain, by men be wrought,
Though like a hill their high estate, they sink to nought.
Explanation
Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.
மூலம்:
966 . புகழ்இன்றால்: புத்தேள்நாட்டு உய்யாதால்: என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை?
பரிமேழலகர் உரை:
இகழ்வார்பின் சென்று நிலை - மனத்தை விட்டுத்
தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று
நிற்கின்ற நிலை; புகழ் இன்று - இவ்வுலகத்துப் புகழ்
பயவாது; புத்தேள் நாட்டு உய்யாது - ஏனைப்
புத்தேளுலகத்துச் செலுத்தாது; மற்று என் - இனி
அவனுக்கு அது செய்வது யாது?
(புகழ் பயப்பதனை 'புகழ்' என்றார். பயனாய
இவ்விரண்டும் இன்றிக் கொன்னே மானம் கெடுகின்ற
என்னை என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவை
செய்தற்கு குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
மதியாமல் இகழ்கின்றவரின் பின்சென்று பணிந்து நிற்கும் நிலை,
ஒருவனுக்குப் புகழும் தாராது; தேவருலகிலும் செலுத்தாது; வேறு
பயன் என்ன?
G.U.Pope:
It yields no praise, nor to the land of Gods throws wide the gate:
Why follow men who scorn, and at their bidding wait?
Explanation
Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven.
மூலம்:
967 . ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
பரிமேழலகர் உரை:
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் - தன்னை
இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால்
ஒருவன் உயிர் வாழ்தலின்; அந்நிலையே கெட்டான்
எனப்படுதல் நன்று . அது செய்யாது இறந்தான் என்று
சொல்லப்படுதல் அவனுக்கு நன்று.
(ஒட்டுதல் - பொருந்துதல். 'அந்நிலையே' என்றது,
செல்லாத முன்னை நிலைக்கண்ணே நின்று
என்றவாறு; அப்பொழுதே என்றும் ஆம். 'புகழும்
புத்தேள் நாடும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர்
வாழ்வாம்' என்பாரை நோக்கிக் கூறியது.) ---
மு.வ உரை:
மதியாதவரின் பின்சென்று ஒருவன் உயிர் வாழ்வதை விட,
அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று
சொல்லப்படுதல் நல்லது
G.U.Pope:
Better 'twere said, 'He's perished!' than to gain
The means to live, following in foeman's train.
Explanation
It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.
மூலம்:
968 . மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து?
பரிமேழலகர் உரை:
பெருந்தகைமை பீடு அழிய வந்த இடத்து - உயர்குடிப்
பிறப்புத் தன்வலியாகிய மானம் அழியவந்துழி; ஊன்
ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ - இறத்தலொழிந்து
பயனில்லாத உடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னும்
இறவாமைக்கு மருந்தாமோ?
('மற்று' என்பது மேற்சொல்லிய இறப்பினை மாற்றி
நின்றது. நற்குணங்கட்கு எல்லாம் இடனாதல் சிறப்புப்
பற்றி, 'பெருந்தகைமை' என்றும், அவை
எல்லாவற்றுள்ளும் அதற்கு வலியாதற் சிறப்புப் பற்றி,
'பீடு' என்றும், அஃது அழிந்தால் நின்ற வெற்றுடம்பு
இழிக்கப்படுதலின், அதனை 'ஊண்' என்றும், பின்னால்
இறத்தல் ஒருதலை என்பார் 'மருந்தோ' என்றும்
கூறினார். மானத்தின் தொழில் அதற்கு இடனாகிய
குடிப்பிறப்பின்மேல் நின்றது.) ---
மு.வ உரை:
ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது,
அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு
மருந்தோ?
G.U.Pope:
When high estate has lost its pride of honour meet,
Is life, that nurses this poor flesh, as nectar sweet?
Explanation
For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.
மூலம்:
969 . மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
பரிமேழலகர் உரை:
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன்
மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத
கவரிமாவை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர் -
உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின்,
அதனைத் தாங்காது இறப்பர்.
(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது.
உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும்
போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய
மானத்தை எய்துவர் என்பதாம். உவமை அவர்க்கு அஃது
இயல்பு என்பது விளக்கி நின்றது.) ---
மு.வ உரை:
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப்
போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.
G.U.Pope:
Like the wild ox that, of its tuft bereft, will pine away,
Are those who, of their honour shorn, will quit the light of day.
Explanation
Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.
மூலம்:
970 . இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
பரிமேழலகர் உரை:
இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி - தமக்கு
இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை
நீத்த மானமுடையாரது புகழ் வடிவினை; தொழுது
ஏத்தும் உலகு எஞ்ஞான்றும் தொழுது துதியாநிற்பர்
உலகத்தார். "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்,
வலவன் ஏவாவானவூர்தி - எய்துவர்,"
(புறநா. 27) ஆகலின், துறக்கச் செலவு சொல்ல
வேண்டாவாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப்
பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம்
உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏத்தி நிற்பார்கள்.
G.U.Pope:
Who, when dishonour comes, refuse to live, their honoured memory
Will live in worship and applause of all the world for aye!
Explanation
The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.