மூலம்:
951 . இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
பரிமேழலகர் உரை:
செப்பமும் நாணும் ஒருங்கு - செம்மையும் நாணும்
சேர; இப்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை -
குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக
உளவாகா.
('இல், குடி, என்பன ஈண்டு உயர்ந்தவற்றின் மேல.
செம்மை - கருத்தும் சொல்லும் செயலும் தம்முள்
மாறாகாமை. நாண் - பழிபாவங்களின் மடங்குதல்.
இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க
வேண்டாமல் தாமே உளவாம்; பிறர்க்காயின் கற்பித்த
வழியும் நெடிது நில்லா என்பதாம். ---
மு.வ உரை:
நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில்
அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.
G.U.Pope:
Save in the scions of a noble house, you never find
Instinctive sense of right and virtuous shame combined.
Explanation
Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born.
மூலம்:
952 . ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
பரிமேழலகர் உரை:
குடிப்பிறந்தார் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார்;
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்
இழுக்கார் - தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண்
எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும், கல்வியான் அன்றித்
தாமாகவே வழுவார்.
(ஒழுக்கம் முதலியன மெய்ம்மொழி
மனங்களினவாகலின், அம் முறையவாயின.
இழுக்குதல் அறியாது வருகின்றமையின், 'இழுக்கார்'
என்றார்.) ---
மு.வ உரை:
உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய
இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில்
வாழ்வர்.
G.U.Pope:
In these three things the men of noble birth fail not:
In virtuous deed and truthful word, and chastened thought.
Explanation
The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty.
மூலம்:
953 . நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.
பரிமேழலகர் உரை:
வாய்மைக் குடிக்கு - எக்காலத்தும் திரிபில்லாத
குடியின்கண் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல்
இகழாமை நான்கும் வகை என்ப - வறியார் சென்ற
வழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும்,
இன்சொற் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய
இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர்.
(பொய்ம்மை திரிபு உடைமையின் திரிபின்மையை
'வாய்மை' என்றும், 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்'
ஆகலின், இகழாமையை அவர் கூறாக்கியும் கூறினார்.
'குடி' ஆகுபெயர். 'நான்கின்வகை' என்பது
பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின்
வேறுபாடு இந்நான்கால் உளதாம் என்று உரைக்க.
இவை மூன்று பாட்டானும் குடிப்பிறந்தாரது இயல்பு
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை,
இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்ல
பண்புகள் என்பர்.
G.U.Pope:
The smile, the gift, the pleasant word, unfailing courtesy
These are the signs, they say, of true nobility.
Explanation
A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.
மூலம்:
954 . அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
பரிமேழலகர் உரை:
அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கிய கோடி
அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்;
குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்ந்த
குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும்
தொழில்களைச் செய்யார்.
('அடுக்கிய கோடி' என்பது, ஈண்டு எண்ணப்படும்
பொருள்மேல் நின்றது. குன்றும் தொழில்கள் -
குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.) ---
மு.வ உரை:
பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில்
பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான
குற்றங்களைச் செய்வதில்லை.
G.U.Pope:
Millions on millions piled would never win
The men of noble race to soul-degrading sin.
Explanation
Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.
மூலம்:
955 . வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
பரிமேழலகர் உரை:
பழங்குடி - தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கண்
பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் - தாம்
கொடுக்கும் பொருள் பண்டையில் சுருங்கியவிடத்தும்;
பண்பின் தலைப்பிரிதல் இன்று - தம் பண்புடைமையின்
நீங்கார்.
(தொன்று தொட்டு வருதல்)
('சேர சோழ பாண்டியர்' என்றார்போலப் படைப்புக்
காலந்தொடங்கி மேம்பட்டு வருதல். அவர்க்கு
நல்குரவாவது, வழங்குவது உள் வீழ்வது ஆகலின்,
அதனையே கூறினார்.) ---
மு.வ உரை:
தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வண்மை வறுமையால் சுருங்கிய
போதிலும், பழம்பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம்
பண்பிலிருந்து நீங்குவதில்லை.
G.U.Pope:
Though stores for charity should fail within, the ancient race
Will never lose its old ancestral grace.
Explanation
Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).
மூலம்:
956 . சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாசு அற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
பரிமேழலகர் உரை:
மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று
வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம்
என்று கருதி அவ்வாறு வாழ்வோர்; சலம் பற்றிச் சால்பு
இல செய்யார் - வறுமையுற்றவழியும், வஞ்சனையைப்
பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார்.
(அமைவின்மை: அம்மரபிற்கு ஏலாமை. இவை
மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும்
அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர்,
வஞ்சனைகொண்டு தகுதியில்லாதவற்றைச் செய்யமாட்டார்.
G.U.Pope:
Whose minds are set to live as fits their sire's unspotted fame,
Stooping to low deceit, commit no deeds that gender shame.
Explanation
Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.
மூலம்:
957 . குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
பரிமேழலகர் உரை:
குடிப்பிறந்தார்கண் குற்றம் - உயர்ந்த குடியின்கண்
பிறந்தார் மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண்
மறுப்போல் உயர்ந்து விளங்கும் - தான்
சிறியதேயாயினும் விசும்பின் கண் மதியிடத்து
மறுப்போல ஓங்கித் தோன்றும.
(உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும்
விசும்பு முதலிய உவமைவகை ஒத்துப் பால்மாறு
பட்டது. குடியது உயர்ச்சியானும் மதி போன்ற அவர்
நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து
வெளிப்படும் என்பதாம்.) ---
மு.வ உரை:
உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில்
திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.
G.U.Pope:
The faults of men of noble race are seen by every eye,
As spots on her bright orb that walks sublime the evening sky.
Explanation
The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.
மூலம்:
958 . நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
பரிமேழலகர் உரை:
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் -
குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம்
இன்மை உளதாமாயின்; அவனைக் குலத்தின்கண்
ஐயப்படும் - அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே
ஐயப்படும் உலகம்.
(நலமும் குலமும், ஆகுபெயர். நாரின்மையால்
கொடாமையும் கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன.
'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கி நின்றது.
நலனுடையனாய் வருதலினிடையே இவை
தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகம் என்பது
அவாய் நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது
பாடமாயின், ஐயப்படுக என விதியாக்கி உரைக்க.
இவை இரண்டு பாட்டானும் வேறுபட்ட வழிப்படும்
இழுக்குக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை
காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட
நேரும்.
G.U.Pope:
If lack of love appear in those who bear some goodly name,
'Twill make men doubt the ancestry they claim.
Explanation
If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.
மூலம்:
959 . நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்: காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
பரிமேழலகர் உரை:
நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் - நிலத்தினியல்பை
அதன் கண் முளைத்த முளை காட்டும்;
குலத்திற்பிறந்தார் வாய்ச்சொல் காட்டும் - அது போலக்
குலத்தின் இயல்பை அதன் கண் பிறந்தார் வாயிற்
சொல் காட்டும்.
(கிடந்தமை உள்ளபடி முளைத்தமாத்திரத்தானே
நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய
கூறாராயினார். ஆகவே, பொருளினும் செயல்
முதலியன வேண்டாவாயின. குலத்து இயல்பு
அறிதற்கருவி கூறுவார் போன்று, இன்சொல்
வேண்டுமென்றவாறாயிற்று.) ---
மு.வ உரை:
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்;
அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய
குடிப்பிறப்பைக் காட்டும்.
G.U.Pope:
Of soil the plants that spring thereout will show the worth:
The words they speak declare the men of noble birth.
Explanation
As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth).
மூலம்:
960 . நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும்: குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
பரிமேழலகர் உரை:
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன்
தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான்
நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின்
யார்க்கும் பணிவு வேண்டுக - குலனுடைமையை
வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும்
பணிதலை வேண்டுக.
(நலம் - புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது,
விதிப் பொருட்டாய் நின்றது. 'வினைப்படு தொகுதியின்
உம்மை வேண்டும்" (தொல்.சொல்.கிளவி.33)
என்புழிப்போல. "அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர்
தம்முன்னோர், தந்தைதாய் என்றிவர்" எல்லாரும்
அடங்க, 'யார்க்கும்' என்றார். பணிவு - இருக்கை
எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு
பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.) --
-
மு.வ உரை:
ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக
வேண்டும்; குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும்
பணிவு வேண்டும்.
G.U.Pope:
Who seek for good the grace of virtuous shame must know;
Who seek for noble name to all must reverence show.
Explanation
He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissi ve to all.