மூலம்:
791 . நாடாது நட்டலின் கேடுஇல்லை: நட்டபின்
வீடுஇல்லை நட்பாள் பவர்க்கு.
பரிமேழலகர் உரை:
நட்பு ஆள்பவர்க்கு நட்ட பின் வீடு இல்லை - நட்பினை விரும்பி
அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவனோடு நட்புச் செய்தபின்
அவனை விடுதலுண்டாகாது; நாடாது நட்டலின் கேடு இல்லை-
ஆகலான் ஆராயாது நட்புச் செய்தல்போலக் கேடுதருவது
பிறிதில்லை.
(ஆராய்தல்: குணம் செய்கைகளது நன்மையை ஆராய்தல்.
கேடு-ஆகுபெயர். நட்கின் தாம் அவர் என்னும்
வேற்றுமையின்மையின், 'வீடு இல்லை' என்றும்,
அவ்வேற்றுமை இன்மையான் அவன்கண் பழி பாவங்கள்
தமவாமாகலின், இருமையும் கெடுவர் என்பது நோக்கி, 'நாடாது
நட்டலின் கேடு இல்லை,' என்றும் கூறினார்.) ---
மு.வ உரை:
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை
இல்லை; ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வதைப் போல்
கெடுதியானது வேறு இல்லை.
G.U.Pope:
To make an untried man your friend is ruin sure;
For friendship formed unbroken must endure.
Explanation
As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry.
மூலம்:
792 . ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
பரிமேழலகர் உரை:
ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் - குணமும்
செய்கையும் நல்லன் என்பது பலகாலும் பலவாற்றானும்
ஆராய்ந்து, ஒருவனோடு நட்புக் கொள்ளாதவன்; கடைமுறை
தான்சாம் துயரம் தரும் - முடிவில் தான் சாதற்கு ஏதுவாய
துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே
விளைக்கும்.
('கடைமுறைக்கண்' என இறுதிக்கண் தொக்க ஏழாவது
விரிக்க. குணமும் செய்தலும் தீயானொடு கொள்ளின், அவற்கு
வரும் பகைமையெல்லாம் தன் மேல வாய்ப் பின் அவற்றான்
இறந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும்
ஆராயவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில்
தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.
G.U.Pope:
Alliance with the man you have not proved and proved again,
In length of days will give you mortal pain.
Explanation
The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.
மூலம்:
793 . குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
பரிமேழலகர் உரை:
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து -
ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும்
குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க-
அவனோடு நட்புச் செய்க.
(குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது
பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார்,
'குற்றமும்' என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும்
பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இன்னும்' என்றும், விடப்படின்
தம் குறையாம் என்பர் அறிந்து யாக்க' என்றும் கூறினார்.) ---
மு.வ உரை:
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும்,
குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக்
கொள்ளவேண்டும்.
G.U.Pope:
Temper, descent, defects, associations free
From blame: know these, then let the man be friend to thee.
Explanation
Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations.
மூலம்:
794 . குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
பரிமேழலகர் உரை:
குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை - உயர்ந்த குடியின் கண்
பிறந்த தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கஞ்சுவானை;
கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும் - சில கொடுத்தாயினும்
நட்புக் கோடல் சிறந்தது.
(குடிப்பிறப்பால் தான் பிழை செய்யாமையும், பழியை
அஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம்; இவை
இரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை
விலை கொடுத்தும் கொள்க என்பதாம்.) ---
மு.வ உரை:
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு
நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக்
கொள்ளவேண்டும்,.
G.U.Pope:
Who, born of noble race, from guilt would shrink with shame,
Pay any price so yo u as friend that man may claim.
Explanation
The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.
மூலம்:
795 . அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.
பரிமேழலகர் உரை:
அல்லது அழச்சொல்லி - தாம் உலக வழக்கல்லது செய்யக்
கருதின்சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து -
செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு
அறிய வல்லார் - அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும்
வல்லாரை; 'ஆய்ந்து நட்புக் கொளல் - ஆராய்ந்து நட்புக்
கொள்க.
('அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான்,
அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு -
உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு
நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய
வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.) ---
மு.வ உரை:
நன்மையில்லாத செயலைக் கண்டபோது வருந்தும் படியாக இடித்துச்
சொல்லி, உலக நடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ந்து
கொள்ளவேண்டும்.
G.U.Pope:
Make them your chosen friend whose words repentance move,
With power prescription's path to show, while evil they reprove.
Explanation
You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world.
மூலம்:
796 . கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
பரிமேழலகர் உரை:
கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல் - ஒருவனுக்குக் கேடு
என்பது தன் நட்டாராகிய புலங்களை எஞ்சாமல் அளப்பதோர்
கோல்; கேட்டினும் ஓர் உறுதி உண்டு - ஆகலின்
அதன்கண்ணும் அவனால் பெறப்படுவதோர் நல்லறிவு உண்டு.
(தத்தம் நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப்
புறத்துத் தோன்றாமல் போந்தார், பின் கேடு வந்துழிச் செயல்
வேறுபடுதலின், அக்கேட்டால் அவை வரையறுக்கப்படும் என்பது
பற்றிக் கேட்டினைக் கோலாக்கியும், அதனால் அவரை
அளந்தறிந்தால் ஆவாரையே கோடலின், அவ்வறிவை 'உறுதி'
என்றும் கூறினார். கிளைஞர்: ஆகுபெயர். இஃது ஏகதேச
உருவகம். இவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும்,
ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவர் என்பதூஉம் கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு
ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு
கோலாகும்.
G.U.Pope:
Ruin itself one blessing lends:
'Tis staff that measures out one's friends.
Explanation
Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations.
மூலம்:
797 . ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
பரிமேழலகர் உரை:
ஒருவற்கு ஊதியம் என்பது - ஒருவனுக்குப் பேறு என்று
சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஓரீஇ விடல் -
அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து
அவரின் நீங்குதல்.
நட்பு ஒழிந்தாலும், நீங்காக்கால் "வெறிகமழ் சந்தனமும்
வேங்கையும் வே"§மாறுபோலத் தீங்கு வருதலின், 'விடல்'
என்றும், நீங்கியவழித் தீங்கு ஒழிதலேயன்றி
இருமையின்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின் அதனை
'ஊதியம்' என்றும் கூறினார். (நாலடி. 180) தீங்குவருதலின்
'விடல்' என்றும் நீங்கியவழித் தீங்கொழிதலேயன்றி இருமை
இன்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின், அதனை
'ஊதியம்' என்றும் கூறினார்.) --- ---
மு.வ உரை:
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது,
அறிவில்லாதவருடன் செய்துகொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக்
கைவிடுதலாகும்,
G.U.Pope:
'Tis gain to any man, the sages say,
Friendship of fools to put away.
Explanation
It is indead a gain for one to renounce the friendship of fools.
மூலம்:
798 . உள்ளற்க உள்ளம் சிறுகுவ: கொள்ளற்க
அல்லல்கண் ஆற்றுஅறுப்பார் நட்பு.
பரிமேழலகர் உரை:
உள்ளம் சிறுகுவ உள்ளற்க - தம் ஊக்கம் சுருங்குவதற்குக்
காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக; அல்லற்
கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க - அதுபோலத் தமக்கு
ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக்
கொள்ளாதொழிக.
(உள்ளம் சிறுகுவ ஆவன, தம்மின் வலியாரோடு
தொடங்கியனவும் பயனில்லனவும் ஆம். 'ஆற்று' என்பது
முதனிலைத் தொழிற் பெயர். முன்னெல்லாம் வலியராவார்
போன்று ஒழிதலின், 'ஆற்று அறுப்பார்' என்றார். எடுத்துக்காட்டு
உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.) ---
மு.வ உரை:
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை
எண்ணாமலிருக்கவேண்டும்; அதுபோல் துன்பம் வந்த போது
கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
G.U.Pope:
Think not the thoughts that dwarf the soul; nor take
For friends the men who friends in time of grief forsake.
Explanation
Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.
மூலம்:
799 . கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.
பரிமேழலகர் உரை:
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை - ஒருவன்
கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு
செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும், உள்ளம் சுடும் -
தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும்,
அந்நினைத்த உள்ளத்தைச் சுடும்.
(நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்கும்
கூற்றினுங் கொடீதாம் எனக் கைவீடு எண்ணிச் செய்த நட்பின்
கொடுமை கூறியவாறு. இனி, 'அவன் தானே ஆக்கிய கேடு
தன்னை அடுங்காலை உள்ளினும், அக்கேட்டினும் சுடும்,' என்று
உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஆராய்ந்தால்
நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.) --
மு.வ உரை:
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன்
கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை
வருத்தும்.
G.U.Pope:
Of friends deserting us on ruin's brink,
'Tis torture e'en in life's last hour to think.
Explanation
The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death.
மூலம்:
800 . மருவுக மாசற்றார் கேண்மை:ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
பரிமேழலகர் உரை:
மாசு அற்றார் கேண்மை மருவுக - உலகோடு ஒத்துக்
குற்றமற்றார் நட்பினையே பயில்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று
ஈத்தும் ஒருவுக - உலகோடு ஒத்தலில்லார் நட்பினை அறியாது
கொண்டாராயின், அவர் வேண்டியதொன்றனைக்
கொடுத்தாயினும் விடுக.
(உலகோடு ஒத்தார் நட்பு இருமை இன்பமும் பயத்தலின்,
'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே
பயத்தலின், அதன் ஒழிவை 'விலை கொடுத்தும் கொள்க'
என்றும் கூறினார். இதனான் அவ்விருமையும் தொகுத்துக்
கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ளவேண்டும்; ஒத்த பண்பு
இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது
கைவிடவேண்டும்.
G.U.Pope:
Cling to the friendship of the spotless one's; whate'er you pay.
Renounce alliance with the men of evil way.
Explanation
Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world).