மூலம்:
721 . வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.
பரிமேழலகர் உரை:
வகை அறிந்து வல்லவை வாய் சோரார் - கற்றுவல்ல
அவை, அல்லா அவை என்னும் அவை வகையினை
அறிந்து, வல்ல அவைக்கண் ஒன்று சொல்லுங்கால்
அச்சத்தான் வழுப்படச் சொல்லார்; சொல்லின் தொகை
அறிந்த தூய்மையவர் - சொல்லின் தொகையெல்லாம்
அறிந்த தூய்மையினை உடையார்.
(இருந்தாரது வன்மை அவைமேல் ஏற்றப்பட்டது.
'வல்லவை' என்பதற்கு, 'தாம் கற்றுவல்ல
நூற்பொருள்களை' என்று உரைப்பாரும் உளர்.
'அச்சத்தான்' என்பது அதிகாரத்தான் வந்தது.
'சொல்லின் தொகை,' 'தூய்மை' என்பவற்றிற்கு
(குறள் 711) மேல் உரைத்தாங்கு உரைக்க.) ---
மு.வ உரை:
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர் அவைக்களத்தின்
வகையினை அறிந்து, வல்லவரின் அவையில் வாய் சோர்ந்து பிழை
சொல்லமாட்டார்.
G.U.Pope:
Men, pure in heart, who know of words the varied force,
The mighty council's moods discern, nor fail in their discourse.
Explanation
The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.
மூலம்:
722 . கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
பரிமேழலகர் உரை:
கற்றாருள் கற்றார் எனப்படுவர் - கற்றார் எல்லாரினும்
இவர் நன்கு கற்றார் என்று உலகத்தாரால்
சொல்லப்படுவார்; கற்றார் முன் கற்ற செலச்
சொல்லுவார் - கற்றாரவைக்கண் அஞ்சாதே தாம்
கற்றவற்றை அவர் மனம் கொள்ளும் வகை சொல்ல
வல்லார்.
(உலகம் அறிவது அவரையே ஆகலின், அதனால்
புகழப்படுவாரும் அவர் என்பதாம்.) ---
மு.வ உரை:
கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில்
பதியுமாறு சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக
மதித்துச் சொல்லப்படுவார்.
G.U.Pope:
Who what they've learned, in penetrating words heve learned to say,
Before the learn'd among the learn'd most learn'd are they.
Explanation
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.
மூலம்:
723 . பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.
பரிமேழலகர் உரை:
பகையகத்துச் சாவார் எளியர் - பகையிடை அஞ்சாது
புக்குச் சாவவல்லார் உலகத்துப் பலர்; அவையகத்து
அஞ்சாதவர் அரியர் - அவையிடை அஞ்சாது புக்குச்
சொல்ல வல்லார் சிலர்.
('அஞ்சாமை,' 'சாவார்' என்பதனோடும் கூட்டி,
அதனால் 'சொல்ல வல்லார்' என்பது வருவித்து
உரைக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் அவை
அஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
பகைவர் உள்ள போரக்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத்
துணிந்தவர் உலகத்தில் பலர்; கற்றவரின் அவைக் களத்தில்
அஞ்சாமல் பேசவல்லவர் சிலரே.
G.U.Pope:
Many encountering death in face of foe will hold their ground;
Who speak undaunted in the council hall are rarely found.
Explanation
Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).
மூலம்:
724 . கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
பரிமேழலகர் உரை:
கற்றார்முன் கற்றசெலசொல்லி - பல நூல்களையும்
கற்றார் அவைக்கண் தாம்கற்றவற்றை அவர்மனம்
கொள்ளுமாற்றாற் சொல்லி; தாம் கற்ற மிக்க
மிக்காருள் கொளல் - அவற்றின் மிக்க பொருள்களை
அம்மிக்க கற்றாரிடத்து அறிந்து கொள்க. எல்லாம்
ஒருவற்குக் கற்றல் கூடாமையின்,
(வேறு வேறாய கல்வியுடையார் பலர் இருந்த
அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்க்கு ஏற்பச்
சொல்லுக; சொல்லவே, அவரும் அவையெல்லாம்
சொல்லுவர் ஆகலான், ஏனைக் கற்க பெறாதன
கேட்டறியலாம் என்பதாயிற்று. அதனால் அவனது
ஒருசார் பயன் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில்
பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம் மிகுதியான
கல்வியை அறிந்து கொள்ள வேண்டும்.
G.U.Pope:
What you have learned, in penetrating words speak out before
The learn'd; but learn what men more learn'd can teach you more.
Explanation
(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning).
மூலம்:
725 . ஆற்றின் அளவுஅறிந்து கற்க அவைஅஞ்சா
மாற்றம் கொடுத்தல் பொருட்டு.
பரிமேழலகர் உரை:
ஆற்றின் அளவு அறிந்து கற்க - சொல்லிலக்கண
நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக்
கற்க; அவை மாற்றம் கொடுத்தற்பொருட்டு -
வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய
சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு.
(அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க
வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது.
அளக்கும் கருவியை 'அளவு' என்றார். ஆகுபெயரான்,
அவர் சொல்லை சொல்வதொரு சொல் சொல்லலாவது,
நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும்
முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப்
பிழையாமல் கற்க என்பதாம். இதனான் அதன் காரணம்
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும்
பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து
கற்க வேண்டும்.
G.U.Pope:
By rule, to dialectic art your mind apply,
That in the council fearless you may make an apt reply.
Explanation
In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).
மூலம்:
726 . வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு?
பரிமேழலகர் உரை:
வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் -
வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன
இயைபு உண்டு; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலோடு
என் - அது போல் நுண்ணியாரது அவையை
அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு ?
(இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது.
நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.) ---
மு.வ உரை:
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு
உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு
நூலோடு என்ன தொடர்பு உண்டு?
G.U.Pope:
To those who lack the hero's eye what can the sword avail?
Or science what, to those before the council keen who quail?
Explanation
What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?
மூலம்:
727 . பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
பரிமேழலகர் உரை:
பகையத்துப் பேடி கை ஔÿபுள்ளிÿவாள் - எறியப்படும்
பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த
கூர்வாளை ஒக்கும்; அவையகத்து அஞ்சுமவன் கற்ற
நூல் - சொல்லப்படும் அவை நடுவண் அதனை
அஞ்சுமவன் கற்ற நூல்.
(பேடி: பெண் இயல்பு மிக்கு ஆண் இயல்பும்
உடையவள். களமும் வாய்த்துத் தானும் நன்றாய்
இருந்ததேயாயினும் பிடித்தவள் குற்றத்தால் வாள்
சிறப்பின்றாயினாற் போல, அவையும் வாய்த்துத்
தானும் நன்றாய் இருந்ததேயாயினும், கற்றவன்
குற்றத்தால் நூல் சிறப்பின்றாயிற்று.) ---
மு.வ உரை:
அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின்
போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான
வாள் போன்றது.
G.U.Pope:
As shining sword before the foe which 'sexless being' bears,
Is science learned by him the council's face who fears.
Explanation
The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.
மூலம்:
728 . பல்லவை கற்றும் பயம்இலரே நல்லவையுள்
நன்கு செலச்செல்லா தார்.
பரிமேழலகர் உரை:
நல்லவையுள் நன்கு செலச் சொல்லாதார் - நல்லார்
இருந்த அவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம்
அச்சத்தான் அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்;
பல்லவை கற்றும் பயம் இலரே - பல நூல்களைக்
கற்றாராயினும் உலகிற்குப் பயன்படுதல் இலர்.
(அறிவார் முன் சொல்லாமையின் கல்வியுண்மை
அறிவாரில்லை என்பதாம். இனிப் 'பயமிலர்'
என்பதற்கு, 'கல்விப் பயனுடையரல்லர்' என்று
உரைப்பாரும் உளர்.) ---
மு.வ உரை:
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைக் கேட்பவர் மனத்தில்
பதியுமாறு சொல்லமுடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன்
இல்லாதவரே.
G.U.Pope:
Though many things they've learned, yet useless are they all,
To man who cannot well and strongly speak in council hall.
Explanation
Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements.
மூலம்:
729 . கல்லா தவரின் கடையென்ப கற்றுஅறிந்தும்
நல்லார் அவைஅஞ்சு வார்.
பரிமேழலகர் உரை:
கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார் -
நூல்களைக் கற்றுவைத்தும், அவற்றால் பயனறிந்து
வைத்தும், நல்லார் இருந்த அவையினை அஞ்சி
ஆண்டுச் சொல்லாதாரை; கல்லாதவரின் கடை என்ப -
உலகத்தார் கல்லாதவரினும் கடையர் என்று
சொல்லுவர்.
(அக்கல்வி அறிவுகளால் பயன் தாமும் எய்தாது
பிறரை எய்துவிப்பதும் செய்யாது, கல்வித்துன்பமே
எய்தி நிற்றலின், 'கல்லாதவரின் கடை' என உலகம்
பழிக்கும் என்பதாம்.) ---
மு.வ உரை:
நூல்களைக் கற்றறிந்தபோதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு
அஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.
G.U.Pope:
Who, though they've learned, before the council of the good men quake,
Than men unlearn'd a lower place must take.
Explanation
They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.
மூலம்:
730 . உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
பரிமேழலகர் உரை:
களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார் - அவைக்
களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச்
சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு
ஒப்பர் - உயிர் வாழ்கின்றாராயினும் உலகத்தாரால்
எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர்.
('ஈண்டுக் 'களன்' என்றது ஆண்டிருந்தாரை. இவை
ஐந்து பாட்டானும் அவை அஞ்சு வாரது இழிவு
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளை (கேட்பவர்
மனத்தில்) பதியுமாறு சொல்லமுடியாதவர், உயிரோடு வாழ்ந்தாலும்
இறந்தவர்க்கு ஒப்பாவர்.
G.U.Pope:
Who what they've learned, in penetrating words know not to say,
The council fearing, though they live, as dead are they.
Explanation
Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.