மூலம்:
711 . அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.
பரிமேழலகர் உரை:
சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின்
குழுவினை அறிந்த தூய்மையினையுடையார்; அவை
அறிந்து ஆராய்ந்து சொல்லுக - தாமென்று
சொல்லுங்கால் அப்பொழுதை அவையினை அறிந்து
ஆராய்ந்து சொல்லுக.
(சொல்லின் குழுவெனவே, செஞ்சோல், இலக்கணச்
சொல், குறிப்புச்சொல் என்னும் மூவகைச் சொல்லும்
அடங்கின. தூய்மை: அவற்றுள் தமக்காகாதன ஒழித்து
ஆவன கோடல். அவை என்றது ஈண்டு அதன்
அளவை. அது மிகுதி, ஒப்பு, தாழ்வு என மூவகைத்து.
அறிதல், தம்மொடு தூக்கி அறிதல். ஆராய்தல்:
இவ்வவைக்கண் சொல்லும் காரியம் இது,
சொல்லுமாறு இது, சொன்னால் அதன் முடிவு இது
என்று, இவை உள்ளிட்டன ஆராய்தல்.) ---
மு.வ உரை:
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர்,
அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து
சொல்ல வேண்டும்.
G.U.Pope:
Men pure in heart, who know of words the varied force,
Should to their audience known adapt their well-arranged discourse.
Explanation
Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).
மூலம்:
712 . இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.
பரிமேழலகர் உரை:
சொல்லின்நடை தெரிந்த நன்மையவர் - சொற்களின்
நடையினை ஆராய்ந்தறிந்த நன்மையினையுடையார்;
இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக -
அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அதன் செவ்வியை
ஆராய்ந்து அறிந்து வழுப்படாமல் மிகவும் தௌ¢ந்து
சொல்லுக.
(சொற்களின் நடையாவது: அம்மூவகைச் சொல்லும்
செம்பொருள்; இலக்கணைப் பொருள் குறிப்புப் பொருள்
என்னும் பொருள்களைப் பயக்குமாறு. செவ்வி;
கேட்டற்கண் விருப்புடைமை. வழு: சொல் வழுவும்
பொருள் வழுவும். (இவை இரண்டு பாட்டானும் ஒன்று
சொல்லுங்கால் அவையறிந்தே சொல்ல வேண்டும்
என்பது கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
சொற்களின் நடையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின்
செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.
G.U.Pope:
Good men to whom the arts of eloquence are known,
Should seek occasion meet, and say what well they've made their own.
Explanation
Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court).
மூலம்:
713 . அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.
பரிமேழலகர் உரை:
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் - அவையினது அளவையறியாது ஒன்று
சொல்லுதலைத் தம் மேற்கொள்வார் அச்சொல்லுதலின்
கூறுபாடும் அறியார்; வல்லதூஉம் இல் - கற்றுவல்ல
கலையும் அவர்க்கு இல்லை.
(அம் மூவகைச் சொற்களால் வரும் சொல்லுதல்
வகைமை கேட்பாரது உணர்வு வகைமைபற்றி
வருதலால், 'சொல்லின் வகையறியார்' என்றும், அஃது
அறியார் என்று எல்லாரானும் இகழப்படுதலின்
'வல்லதூஉம்இல்' என்றும் கூறினார். இதனான்
அவையறியாக்கால் வரும் குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர்,
சொற்களின் வகை அறியாதவரே; அவர் சொல்லவல்லதும் இல்லை.
G.U.Pope:
Unversed in councils, who essays to speak.
Knows not the way of suasive words,- and all is weak.
Explanation
Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).
மூலம்:
714 . ஓளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.
பரிமேழலகர் உரை:
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் - அறிவால்
ஔÿபுள்ளிÿளியாரவைக் கண் தாமும் ஒள்ளியாராக;
வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை
வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய கதையின்
நிறத்தைக் கொள்க.
(ஒள்ளியார் என்றது மிக்காரையும் ஒத்தாரையும். அது
விகாரத்தால் ஒளியார் என்று நின்றது. ஒள்ளியராதல்:
தம் நூலறிவுஞ் சொல்வன்மையும் தோன்ற விரித்தல்.
அவை அறியாத புல்லரை வெளியார்' என்றது. வயிரம்
இல் மரத்தை வெளிறு' என்னும் வழக்குப்பற்றி. அவர்
மதிக்கும் வகை அவரிலும் வெண்மையுடையராக
என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார்.
அவையளவு அறிந்தார் செய்யும் திறம் இதனான்
தொகுத்துக் கூறப்பட்டது. பின்னர் விரித்துக் கூறுப.) --
-) ---
மு.வ உரை:
அறிவிற் சிறந்தவரின்முன் தாமும் அறிவிற் சிறந்தவராய்ப் பேச
வேண்டும்; அறிவில்லாதவர் முன் தாமும் வெண் சுண்ணம்போல்
அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.
G.U.Pope:
Before the bright ones shine as doth the light!
Before the dull ones be as purest stucco white!
Explanation
Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.
மூலம்:
715 . நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
பரிமேழலகர் உரை:
நன்று என்றவற்றுள்ளும் நன்றே - ஒருவற்கு இது
நன்று என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள்
எல்லாவற்றுள்ளும் நன்றே; முதுவருள் முந்து கிளவாச்
செறிவு - தம்மின் மிக்கார் அவைக்கண் அவரின்
முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம்.
(தம் குறைவும், அவர் மிகுதியும், முந்து கிளர்ந்தாற்
படும் இழுக்கும், கிளவாக்கால் எய்தும் நன்மையும்
அறிந்தே அடங்கினமையின், அவ்வடக்கத்தினை 'நன்று
என்றவற்றுள்ளும் நன்று' என்றார். முன் கிளத்தலையே
விலக்கினமையின், உடன் கிளத்தலும் பின் கிளத்தலும்
ஆம் என்பது பெற்றாம். இதனான் மிக்கார் அவைக்கண்
செய்யும் திறம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம்
ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும்
நல்லது.
G.U.Pope:
Midst all good things the best is modest grace,
That speaks not first before the elders' face.
Explanation
The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.
மூலம்:
716 . ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு.
பரிமேழலகர் உரை:
ஆற்றின் நிலை தளர்ந்தற்று - வீடு எய்தற்பொருட்டு
நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும்
நிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும்; வியன் புலம் ஏற்று
உணர்வார் முன்னர் இழுக்கு - அகன்ற
நூற்பொருள்களை உட்கொண்டு அவற்றின்
மெய்ம்மையை உணரவல்லார் அவைக்கண்
வல்லானொருவன் சொல் இழுக்குப்படுதல்.
(நிலை தளர்ந்து வீழ்தல் 'உரன் என்னும் தோட்டியான்
ஒரைந்தும் (குறள். 24) காத்தொழுகியான், பின்
இழுக்கிக் கூடா ஒழுக்கத்தினால் பயன் இழத்தலே
அன்றி இகழவும் படும் என்பதாம். இதனான் அதன்கண்
இழுக்கியவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே
குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலை தளர்ந்து கெடுவதைப்
போன்றதாகும்.
G.U.Pope:
As in the way one tottering falls, is slip before
The men whose minds are filled with varied lore.
Explanation
(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).
மூலம்:
717 . கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
பரிமேழலகர் உரை:
கசடு அறச்சொல் தெரிதல் வல்லாரகத்து -
வழுப்படாமல் சொற்களை ஆராய்தல் வல்லார்
அவைக்கண் சொல்லின்; கற்று அறிந்தார் கல்வி
விளங்கும் - பல நூல்களையும் கற்று அவற்றின் ஆய
பயனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித்
தோன்றும்.
('சொல்லின்' என்பது அவாய் நிலையான் வந்தது.
ஆண்டே சொல்லுக என்பதாம்.) ---
மு.வ உரை:
குற்றமறச் செயல்களை ஆராய்வதில் வல்ல அறிஞரிடத்தில், பல
நூல்களையும் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித்
தோன்றும்.
G.U.Pope:
The learning of the learned sage shines bright
To those whose faultless skill can value it aright.
Explanation
The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.
மூலம்:
718 . உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
பரிமேழலகர் உரை:
உணர்வது உடையார்முன் சொல்லல் - பிறர்
உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல
அறிவினையுடையவர் அவைக்கண் கற்றார் ஒன்றனைச்
சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று -
தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச்
சொரிந்தாற்போலும்.
(தானேயும் வளர்தற்குரிய கல்வி மிக வளரும்
என்பதாம். இவை இரண்டு பாட்டானும், ஒத்தார்
அவைக்கண் எவ்வழியும் சொல்லுக என்பது
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல்,
தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.
G.U.Pope:
To speak where understanding hearers you obtain,
Is sprinkling water on the fields of growing grain!
Explanation
Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).
மூலம்:
719 . புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்.
பரிமேழலகர் உரை:
நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்லார்
இருந்த அவைக்கண் நல்ல பொருள்களை அவர்
மனங்கொள்ளச் சொல்லுதற்குரியார்; புல்லவையுள்
பொச்சாந்தும் சொல்லற்க - அவையறியாத புல்லர்
இருந்த அவைக்கண் அவற்றை மறந்தும்
சொல்லாதொழிக.
(சொல்லின், தம் அவையறியாமையை நோக்கி
நல்லவையும், பொருளறியாமையால் புல்லவைதானும்
இகழ்தலின், இரண்டு அவைக்கும் ஆகா என்பது கருதிப்
'பொச்சாந்தும் சொல்லற்க' என்றார்.) ---
மு.வ உரை:
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளை மனத்தில் பதியுமாறு
சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும்
பேசக்கூடாது.
G.U.Pope:
In councils of the good, who speak good things with penetrating power,
In councils of the mean, let them say nought, e'en in oblivious hour.
Explanation
Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low
மூலம்:
720 . அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.
பரிமேழலகர் உரை:
தம் கணத்தார் அல்லார் முன் கோட்டி கொளல் -
நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண்
ஒன்றனையும் சொல்லற்க; அங்கணத்துள் உக்க
அமிழ்தற்று - சொல்லின், அது தூய்தல்லாத
முற்றத்தின்கண் உக்க அமிழ்தனை ஒக்கும். ('கொள்'
என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின்
எதிர்மறை அல்விகுதியோடு கூடி 'மகன் எனல்'
(குறள் 196) என்பது போல நின்றது. 'சொல்லின்,'
'அது' என்பன அவாய் நிலையான் வந்தன.
பிறரெல்லாம் 'கொளல்' என்பதனைத் தொழிற்
பெயராக்கி உரைத்தார்; அவர் அத்தொழில் அமிழ்து
என்னும் பொருள் உவமையொடு இயையாமை
நோக்கிற்றிலர். சாவா மருந்தாதல் அறிந்து நுகர்வார்
கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபு
இன்றிக் கெட்டவாறு தோன்ற, 'உக்க அமிழ்து'
என்றார். அச்சொல் பயனில் சொல்லாம் என்பதாயிற்று.
இவை இரண்டு பாட்டானும் தாழ்ந்தார் அவைக்கண்
ஒரு வழியும் சொல்லற்க என்பது கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
தம் இனத்தவர் அல்லாதவரின் கூட்டத்தின்முன் ஒரு பொருள்
பற்றிப் பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம்
போன்றது.
G.U.Pope:
Ambrosia in the sewer spilt, is word
Spoken in presence of the alien herd.
Explanation
To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.