மூலம்:
671 . சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
பரிமேழலகர் உரை:
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் - விசாரத்திற்கு எல்லையாவது
விசாரிக்கின்றான் 'இனி இது தப்பாது' என்னும் துணிவினைப்
பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - அங்ஙனம்
துணிவுபெற்ற வினை, பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின், அது
குற்றமுடைத்து.
['சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் எனவே, துணிவு எய்தும் அளவும்
சூழ வேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் 'துணிவு' ஆகு பெயர்.
நீட்டிப்பு; செய்யுங்காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழி
வாகலானும், பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின்
அதனைத் 'தீது' என்றார்.] ---
மு.வ உரை:
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும்.
அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.
G.U.Pope:
The Resolve is counsel's end, If resolutions halt
In weak delays, still unfulfilled, 'tis grievous fault.
Explanation
Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil.
மூலம்:
672 . தூங்குக தூங்கிச் செயற்பால: தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
பரிமேழலகர் உரை:
தூங்கிச் செயற்பால தூங்குக - நீட்டித்துச் செய்யும் பகுதியவாய
வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க -
நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும்
வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது
ஒழிக.
[இரு வழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்கப்பட்டது.
இருவதை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும்.
மாறிச்செய்யின், அவை வாயா என்பது கருத்து. மேல் 'தூங்காமை'
என்றார் (குறள் 383); ஈண்டதனைப் பகுத்துக் கூறினார். இவை
இரண்டு பாட்டானும் பொதுவகையால் வினை செய்யும் திறம்
கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
காலந்தாழ்த்துச் செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்த்தே
செய்யவேண்டும்; காலந்தாழ்க்காமல் விரைந்து செய்ய வேண்டிய
செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக்கூடாது.
G.U.Pope:
Slumber when sleepy work's in hand: beware
Thou slumber not when action calls for sleepless care!.
Explanation
Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.
மூலம்:
673 . ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே: ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
பரிமேழலகர் உரை:
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று - வினை செய்யுங்கால்
இயலுமிடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று; ஒல்லாக்கால்
செல்லும் வாய் நோக்கிச் செயல் - அஃது இயலாவிடத்து ஏனை
மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயம் நோக்கிச் செய்க.
[இயலுமிடம்: பகையின் தான் வலியனாகிய காலம். அக்காலத்துத்
தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலின். இயலா
இடம் - ஒத்த காலமும் மெலிய காலமும் அவ்விரண்டு காலத்தும்
சாமபேத தானங்களுள் அது முடியும் உபாயத்தாற் செய்க என்றார்,
அவை ஒன்றற்கொன்று வேறுபாடுடையவேனும் உடம்படுத்தற்
பயத்தான் தம்முள் ஒக்கும் ஆகலின். இதனான், வலியான்,
ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம்,
அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.] ---
மு.வ உரை:
இயலுமிடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது;
இயலவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது
செய்யவேண்டும்.
G.U.Pope:
When way is clear, prompt let your action be;
When not, watch till some open path you see.
Explanation
Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.
மூலம்:
674 . வினைபகை என்றஇரண்டின் எச்சம் நினையும்கால்
தீஎச்சம் போலத் தெறும்.
பரிமேழலகர் உரை:
வினை பகை என்ற இரண்டின் எச்சம் - செய்யத் தொடங்கிய
வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட
இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் -
ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப் பின் வளர்ந்து கெடுக்கும்.
[இனி, இக்குறை என் செய்வது'? என்று இகழ்ந்தொழியற்க,
முடியச் செய்க என்பதாம். பின் வளர்தல் ஒப்புமைபற்றிப்
பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந்
திறம் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
செய்யத் தொடங்கிய செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின்
குறை, ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல்
வளர்ந்து கெடுக்கும்.
G.U.Pope:
With work or foe, when you neglect some little thing,
If you reflect, like smouldering fire, 'twill ruin bring.
Explanation
When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire.
மூலம்:
675 . பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
பரிமேழலகர் உரை:
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் - வினை
செய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும்
இடனுமாகிய இவ்வைந்தனையும்; இருள் தீர எண்ணிச் செயல் -
மயக்கம் அற எண்ணிச் செய்க.
[எண்ணொடு, பிறவழியும் கூட்டப்பட்டது. பொருள் - அழியும்
பொருளும் ஆகும் பொருளும் கருவி - தன் தானையும்
மாற்றார்தானையும். காலம் - தனக்கு ஆகுங் காலமும் அவர்க்கு
ஆகுங் காலமும். வினை - தான் வல்ல வினையும் அவர்
வல்லவினையும். இடம் - தான் வெல்லும் இடமும் அவர்
வெல்லும் இடமும். இவற்றைத் தான் வெற்றியெய்தும் திறத்தில்
பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.] ---
மு.வ உரை:
வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட
தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச்
செய்ய வேண்டும்.
G.U.Pope:
Treasure and instrument and time and deed and place of act:
These five, till every doubt remove, think o'er with care exact.
Explanation
Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.
மூலம்:
676 . முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
பரிமேழலகர் உரை:
முடிவும் - வினை செய்யுங்கால் அது முடிவதற்குளதாம்
முயற்சியும்; இடையூறும் - அதற்கு வரும் இடையூறும்;
முற்றியாங்கு எய்தும் படுபயனும் - அது நீங்கி முடிந்தால் தான்
எய்தும் பெரும்பயனும்; பார்த்துச் செயல் - சீர் தூக்கிச் செய்க.
[முடிவு, ஆகுபெயர். 'முயற்சி இடையூறுகளது அளவின் பயனது
அளவு பெரியதாயின் செய்க' என்பதாம்] ---
மு.வ உரை:
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும்,
முடிந்தபோது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து
செய்ய வேண்டும்.
G.U.Pope:
Accomplishment, the hindrances, large profits won
By effort: these compare,- then let the work be done.
Explanation
An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion).
மூலம்:
677 . செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
பரிமேழலகர் உரை:
செய்வினை செய்வான் செயன் முறை - அவ்வாற்றால்
செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும்
முறைமையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல் -
அவனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தான் அறிதல்.
['அவ்வாறு' என்றது, பொருள் முதலிய எண்ணலையும் முடிவு
முதலிய தூக்கலையும். உள் அறிவான் - முன் செய்து போந்தவன்.
அவன் கருத்து; அவன் செய்து போந்த உபாயம். அதனை யறியவே,
தானும் அதனால் செய்து பயன் எய்தும் என்பதாம். இவை மூன்று
பாட்டானும் ஒப்பான் செய்யுந் திறம் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
செயலைச் செய்கின்றவன் செய்யவேண்டியமுறை, அந்தச் செயலின்
உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத் தான் ஏற்றுக்
கொள்வதாகும்.
G.U.Pope:
Who would succeed must thus begin: first let him ask
The thoughts of them who thoroughly know the task.
Explanation
The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof.
மூலம்:
678 . வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
பரிமேழலகர் உரை:
வினையான் வினை ஆக்கிக்கோடல் - செய்கின்ற வினையாலே
அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக் கொள்க; நனைகவுள்
யானையால் யானை யாத்தற்று - அது மதத்தான் நனைந்த
கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிது மோர்
யானையைப் பிணித்தனோடு ஒக்கும்.
[பிணித்தற்கு அருமை தோன்ற 'நனைகவுள்' என்பது பின்னும்
கூறப்பட்டது. தொடங்கிய வினையானே பிறிதும் ஓர் வினையை
முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க. செய்யவே,
அம்முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.] --
-
மு.வ உரை:
ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு
செயலையும் செய்து முடித்துக்கொள்ளல், ஒரு யானையால்
மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.
G.U.Pope:
By one thing done you reach a second work's accomplishment;
So furious elephant to snare its fellow brute is sent.
Explanation
To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.
மூலம்:
679 . நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
பரிமேழலகர் உரை:
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே - வினை செய்வானால்
தன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து
செய்யப்படும்; ஒட்டாரை ஒட்டிக் கொளல் - தன் பகைவரோடு
ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக்கோடல்.
[அவ்வினை வாய்த்தற்பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத்
தன் மெலிவு புலனாவதன் முன்னே செய்க என்பர், 'விரைந்தது'
என்றார். 'விரைந்து செய்யப்படுவது' என்றவாறு வினைசெய்யும்
திறமாகலின் பகைவரோடு ஒட்டாராயிற்று. தன் ஒட்டார்
பிறருட்கூடாமல் மாற்றி வைத்தல் எனினும் அமையும்.] ---
மு.வ உரை:
பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல்,
நண்பர்க்கு உதவியானவற்றைச் செய்தலை விட விரைந்து
செய்யத்தக்கதாகும்.
G.U.Pope:
Than kindly acts to friends more urgent thing to do,
Is making foes to cling as friends attached to you.
Explanation
One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friends.
மூலம்:
680 . உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
பரிமேழலகர் உரை:
உறை சிறியார் - ஆளும் இடஞ்சிறியராய அமைச்சர்; உள் நடுங்கல்
அஞ்சி - தம்மின் வலியரால் எதிர்ந்தவழித் தம் பகுதி நடுங்கலை
அஞ்சி; குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வார். அந்நிலைக்கு
வேண்டுவதாய சந்து கூடுமாயின், அவரைத் தாழ்ந்து அதனை
ஏற்றுக் கொள்வர்.
[இடம்:நாடும் அரணும். அவற்றது சிறுமை ஆள்வார்மேற்
ஏற்றப்பட்டது. மெலியாரோடு சந்திக்கு வலியார் இயைதல்
அரிதாகலின், 'பெறின்' என்றார். அடியிலே மெலியாராயினார் தம்
பகுதியும் அஞ்சி நீங்கின் முதலொடும் கெடுவராகலின், அது
வாராமல் சிறிது கொடுத்தும் சந்தியை ஏற்றுக் கொள்க என்பதாம்.
பணிதல் மானமுடையார்க்குக் கருத்து அன்மையின், 'கொள்வர்'
என உலகியலால் கூறினார். இவை மூன்று பாட்டானும் மெலியான்
செய்யும் திறம் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
வலிமை குறைந்தவர், தம்மைச் சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காகத்
தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால் வலிமை மிக்கவரைப்
பணிந்து ஏற்றுக் கொள்வார்.
G.U.Pope:
The men of lesser realm, fearing the people's inward dread,
Accepting granted terms, to mightier ruler bow the head.
Explanation
Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation.