மூலம்:
561 . தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
பரிமேழலகர் உரை:
தக்காங்கு நாடி-ஒருவன் தன்னின் மெலியார்மேல்
சென்ற வழி அதனை நடுவாக நின்று ஆராய்ந்து
தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது
வேந்து-பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை
அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான்.
['தக்காங்கு', 'ஒத்தாங்கு' என்பன ஒரு சொல். தகுதி
என்பது நடுவுநிலைமையாதல் "தகுதி என ஒன்றும்
நன்றே" (குறள். 111) என்பதனாலும் அறிக.
இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர்
காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும்
வினையாதல் பெற்றாம்.] ---
மு.வ உரை:
செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம்
செய்யாதபடி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன்
ஆவான்.
G.U.Pope:
Who punishes, investigation made in due degree,
So as to stay advance of crime, a king is he.
Explanation
He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.
மூலம்:
562 . கடிதுஓச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
பரிமேழலகர் உரை:
கடிதுஓச்சி-அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால்
அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி; மெல்ல எறிக-
செய்யுங்கால் அளவிறவாமல் செய்க; ஆக்கம் நெடிது
நீங்காமை வேண்டுபவர்-ஆக்கம் தம்கண் நெடுங்காலம்
நிற்றலை வேண்டுவார்.
(கடிது ஓச்சல், குற்றஞ் செய்வார் அதனை அஞ்சுதற்
பொருட்டும், மெல்ல எறிதல் யாவரும் வெருவாமைப்
பொருட்டுமாம். தொடங்கின அளவில் குறைதல் பற்றி
மென்மை கூறப்பட்டது. 'ஓச்சுதல்', 'எறிதல்' என்பன
இரண்டும் உவமைபற்றி வந்தன. இவை இரண்டு
பாட்டானும் குடிகள் வெருவந்த செய்யாமையது இயல்பு
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத்
தொடங்கும்போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி, அளவு
மீறாமல் முறை செய்ய வேண்டும்.
G.U.Pope:
For length of days with still increasing joys on Heav'n who call,
Should raise the rod with brow severe, but let it gently fall.
Explanation
Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires wi th strictness, and then punish with mildness.
மூலம்:
563 . வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
பரிமேழலகர் உரை:
வெருவந்த செய்து ஒழுகும் செங்கோலன் ஆயின்-
குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும்
வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக்
கெடும்-அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும்.
(வெங்கோலன்' என்பது ஈண்டு வாளா பெயராய்
நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன
ஒரு பொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும்
முன்னர்க் கூறப்படும்.) ---
மு.வ உரை:
குடிகள் அஞ்சும்படியான கொடுமைகளைச் செய்து ஆளும்
கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில்
கெடுவான்.
G.U.Pope:
Where subjects dread of cruel wrongs endure,
Ruin to unjust king is swift and sure.
Explanation
The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.
மூலம்:
564 . இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
பரிமேழலகர் உரை:
இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல்
வேந்தன்-குடிகளான் 'நம் இறைவன் கடியன்' என்று
சொல்லப்படும் இன்னாத சொல்லையுடைய வேந்தன்;
உறை கடுகி ஒல்லைக் கெடும்-ஆயுளும் குறைந்து
செல்வமும் கடிதின் இழக்கும்.
(நெஞ்சு நொந்து சொல்லுதலான், இன்னாமை
பயப்பதாய சொல்லை 'இன்னாச் சொல்' என்றார்.
'உறை' என்பது முதனிலைத் தொழிற் பெயர். அஃது
ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாள்மேல்
நின்றது. அது குறைதலாவது; அச்சொல் இல்லாதார்க்கு
உள்ளதிற் சுருங்குதல்.) ---
மு.வ உரை:
G.U.Pope:
'Ah! cruel is our king', where subjects sadly say,
His age shall dwindle, swift his joy of life decay.
Explanation
The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.
மூலம்:
565 . அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
பரிமேழலகர் உரை:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்-
தன்னைக் காணவேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க்
கண்டால் இன்னாத முகத்தினை யுடையானது பெரிய
செல்வம்; பேய் கண்டன்னது உடைத்து- பேயாற்
காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து.
(எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின.
இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது
செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது
என்பதுபற்றிப் 'பேய் கண்டன்னது உடைத்து' என்றார்.
காணுதல்: தன் வயமாக்குதல்.) ---
மு.வ உரை:
எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும்
உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப்
போன்ற தன்மையுடையது.
G.U.Pope:
Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
His ample wealth shall waste, blasted by demon's glance.
Explanation
The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.
மூலம்:
566 . கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடுஇன்றி ஆங்கே கெடும்.
பரிமேழலகர் உரை:
கடுஞ் சொல்லன் கண்இலன் ஆயின்-அரசன் கடிய
சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும்
இலனாயின்; நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே
கெடும்-அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி
அப்பொழுதே கெடும்.
("வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது
பொருள்ஈட்டம் கள்காமமொடு ஏழு" எனப்பட்ட
விதனங்களுள், கடுஞ்சொல்லையும் மிகுதண்டத்தையும்
இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்'
ஆகு பெயர். இவை செய்தபொழுதே கெடுஞ்சிறுமைத்து
அன்றாயினும் என்பார், 'நெடுஞ்செல்வம்' என்றார்.
நீடுதல்: நீட்டித்தல்.) ---
மு.வ உரை:
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய்
உள்ளவனுடைய பெரிய செல்வம் நீட்டித்தல் இல்லாமல்
அப்பொழுதே கெடும்.
G.U.Pope:
The tyrant, harsh in speach and hard of eye,
His ample joy, swift fading, soon shall die.
Explanation
The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.
மூலம்:
567 . கடுமொழியும் கைஇகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
பரிமேழலகர் உரை:
கடுமொழியும் கையிகந்த தண்டமும்-கடிய சொல்லும்
குற்றத்தின் மிக்க தண்டமும்; வேந்தன் அடுமுரண்
தேய்க்கும் அரம்-அரசனது பகை வெல்லுதற்கேற்ற
மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம்.
(கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தால்
தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின்,
அவற்றை அரமாக்கித் திண்ணிதாயினும் தேயும்
என்றற்கு அடுமுரணை இரும்பாக்கினார். ஏகதேச
உருவகம். அரம் என்பதனைத் தனித்தனி கூட்டுக.
இவை ஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னா
முகம் உடைமை, கண்ணோட்டம் இன்மை,
கடுஞ்சொற்சொல்லல், கை இகந்த தண்டம் என்று
இவைகள் குடிகள் அஞ்சும் வினையென்பதுஉம், இவை
செய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும்
என்பதூஉம் கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய
வெற்றிக்குக் காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.
G.U.Pope:
Harsh words and punishments severe beyond the right,
Are file that wears away the monarch's conquering might.
Explanation
Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying
(his enemies).
மூலம்:
568 . இனத்ததுஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு.
பரிமேழலகர் உரை:
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன்-காரியத்தைப் பற்றி
வந்த எண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து அவரோடு
தானும் எண்ணிச் செய்யாத அரசன்; சினத்து ஆற்றிச்
சீறின்-அப் பிழைப்பால் தன் காரியம் தப்பியவழித்
தன்னைச் சினமாகிய குற்றத்தின்கண்ணே செலுத்தி
அவரை வெகுளுமாயின்; திருச் சிறுகும்-அவன்
செல்வம் நாள்தோறும் சுருங்கும்.
(அரசர் பாரம் பொறுத்துய்த்தல் ஒப்புமையான்
அமைச்சரை 'இனம்' என்றும், தான் பின்
பிழைப்பாதால் அறிந்து அமையாது, அதனை அவர்மேல்
ஏற்றி வெகுளின் அவர் வெரீஇ நீங்குவர்; நீங்கவே,
அப்பிழைப்புத் தீருமாறும் அப் பாரம் இனிது உய்க்கு
மாறும் இலனாம் என்பது நோக்கி, 'திருச் சிறுகும்'
என்றும் கூறினார். இதனான் பகுதி அஞ்சும் வினையும்,
அது செய்தான் எய்தும் குற்றமும் கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன்,
சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய
செல்வம் சுருங்கும்.
G.U.Pope:
Who leaves the work to those around, and thinks of it no more;
If he in wrathful mood reprove, his prosperous days are o'er!
Explanation
The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.
மூலம்:
569 . செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
பரிமேழலகர் உரை:
செரு வந்த போழ்தில், சிறை செய்யா வேந்தன்,
வெருவந்து, வெய்து கெடும். சிறை செய்யா வேந்தன்-
செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகலாவதோர்
அரண் செய்துகொள்ளாத அரசன்; செருவந்த போழ்தில்
வெருவந்து வெய்து கெடும் - அது வந்த காலத்து ஏமம்
இன்மையான் வெருவிக் கடிதின் கெடும்.
(பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின்,
தனியனாய்த் தானும் வெருவிச் அப் பகைவயத்தனாம்
என்பதாம். இதனால்தான் அஞ்சும் வினையும் அது
செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
முன்னமே தக்கவாறு அரண் செய்துகொள்ளாத அரசன் போர் வந்த
காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.
G.U.Pope:
Who builds no fort whence he may foe defy,
In time of war shall fear and swiftly die.
Explanation
The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.
மூலம்:
570 . கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்: அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
பரிமேழலகர் உரை:
கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும்-கடுங்கோலனாய
அரசன் நீதி நூல் முதலிய கல்லாதாரைத் தனக்குப்
பகுதியாகக் கூட்டாநிற்கும்; அது அல்லது நிலக்குப்
பொறை இல்லை-அக்கூட்டம் அல்லது நிலத்திற்கு
மிகையாய பாரம் பிறிது இல்லை.
('கடுங்கோல்' என்பது ஈண்டு மிக்க தண்டத்தின்
மேற்று 'அன்றி, அதனைச் செய்வான் மேற்று
ஆயிற்று. அவன் அது செய்தற்கு இயைவாரை அல்லது
கூட்டாமையின், 'கல்லார்ப் பிணிக்கும்' என்றும்,
ஏனையவற்றை எல்லாம் பொறுக்கின்றது இயல்பு
ஆகலின், நிலத்திற்குப் 'பொறை அது அல்லது
இல்லை' என்றும் கூறினார். நிலக்கு என்பது செய்யுள்
விகாரம். இதனான் வெருவந்த செய்தலின் குற்றம்
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச்
சேர்த்துக்கொள்ளும்; அது தவிர நிலத்திற்குச் சுமை வேறு இல்லை.
G.U.Pope:
Tyrants with fools their counsels share:
Earth can no heavier burthen bear!
Explanation
The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).