மூலம்:
551 . கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்துஒழுகும் வேந்து.
பரிமேழலகர் உரை:
கொலை மேற்கொண்டாரின் கொடிது - பகைமை பற்றிக்
கொல்லுதல் தொழிலைத் தம்மேற்கொண்டு
ஒழுகுவாரினும் கொடியன்; அலை மேற்கொண்டு
அல்லவை செய்து ஒழுகும் வேந்து - பொருள் வெஃகிக்
குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு
முறை அல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன்.
(அவர் செய்வது ஒரு பொழுதைத் துன்பம்; இவன்
செய்வது எப்பொழுதும் துன்பமாம் என்பதுபற்றி,
அவரினும் கொடியன் என்றார். பால் மயக்கு உறழ்ச்சி.
'வேந்து' என்பது உயர்திணைப் பொருட்கண் வந்த
அஃறினைச் சொல். 'அலை கொலையினும் கொடிது'
என்பதாயிற்று.) ---
552 வேலொடு நின்றான் இடுவென்
றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத் தனியே
வேல் கொண்டு நின்ற கள்வன்; இடு என்றது போலும்-
ஆறு செல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று
வேண்டுதலோடு ஒக்கும்; கோலொடு நின்ற இரவு -
ஒறுத்தல் தொழிலோடு நின்ற அரசன் குடிகளைப்
பொருள் வேண்டுதல்.
('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு
நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள்
அன்மையும் பெற்றாம். 'தாராக்கால் ஒறுப்பல்' என்னும்
குறிப்பினன் ஆகலின், இரவாற் கோடலும்
கொடுங்கோன்மை ஆயிற்று. இவை இரண்டு
பாட்டானும் கொடுங்கோன்மையது குற்றம்
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத
செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக்
கொண்டவரைவிடக் கொடியவன்.
G.U.Pope:
Than one who plies the murderer's trade, more cruel is the king
Who all injustice works, his subjects harassing.
Explanation
The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.
மூலம்:
552 . வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
பரிமேழலகர் உரை:
வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத் தனியே
வேல் கொண்டு நின்ற கள்வன்; இடு என்றது போலும்-
ஆறு செல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று
வேண்டுதலோடு ஒக்கும்; கோலொடு நின்ற இரவு -
ஒறுத்தல் தொழிலோடு நின்ற அரசன் குடிகளைப்
பொருள் வேண்டுதல்.
('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு
நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள்
அன்மையும் பெற்றாம். 'தாராக்கால் ஒறுப்பல்' என்னும்
குறிப்பினன் ஆகலின், இரவாற் கோடலும்
கொடுங்கோன்மை ஆயிற்று. இவை இரண்டு
பாட்டானும் கொடுங்கோன்மையது குற்றம்
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
G.U.Pope:
As 'Give' the robber cries with lance uplift,
So kings with sceptred hand implore a gift.
Explanation
The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth".
மூலம்:
553 . நாள்தோறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தோறும் நாடு கெடும்.
பரிமேழலகர் உரை:
நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன்
நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து
அதற்கு ஒக்க முறையைச் செய்யாத அரசன்,
நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு
இழக்கும்.
(அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை
அவன்மேல் நின்றது. இழத்தல்: பயன் எய்தாமை.
'மன்னவன் நாடு நாள்தொறும் கெடும்', என்று
உரைப்பாரும் உளர்.) ---
மு.வ உரை:
நாள்தோறும தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமைகளை
ஆராய்ந்து முறை செய்யாத அரசன், நாள்தோறும் ( மெல்ல
மெல்லத் ) தன் நாட்டை இழந்து வருவான்.
G.U.Pope:
Who makes no daily search for wrongs, nor justly rules, that king
Doth day by day his realm to ruin bring.
Explanation
The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.
மூலம்:
554 . கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
பரிமேழலகர் உரை:
சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல்
விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன்;
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன்
ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய
குடிகளையும் சேர இழக்கும்.
('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய
பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)
---
மு.வ உரை:
( ஆட்சிமுறை கெட்டுக் ) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும்
செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து
விடுவான்.
G.U.Pope:
Whose rod from right deflects, who counsel doth refuse,
At once his wealth and people utterly shall lose.
Explanation
The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.
மூலம்:
555 . அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
பரிமேழலகர் உரை:
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே -
அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று
அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே;
செல்வத்தைத் தேய்க்கும் படை-அவன் செல்வத்தைக்
குறைக்கும் கருவி.
(அழுத கண்ணீர்; அழுதலான் வந்த கண்ணீர் -
'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது
ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில்
அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக்
கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம்
கடிதின் தேயும் என்பது கருத்து.) ---
மு.வ உரை:
( முறை செய்யாதவனுடைய ) செல்வத்தைத் தேய்த்து
அழிக்கவல்ல படை, அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க
முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ?
G.U.Pope:
His people's tears of sorrow past endurance, are not they
Sharp instruments to wear the monarch's wealth away?
Explanation
Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?
மூலம்:
556 . மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.
பரிமேழலகர் உரை:
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப்
புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம்;
அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் -
அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப்
புகழ்கள்தாம் உளவாகா.
(விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம்
வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல்
"இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக"
(நாண்மணி 17) என்பதனானும் அறிக. மன்னாமை:
ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால் ஒளி
மன்னாவாம்: ஆகவே, தாமும் மன்னார் என்பதாயிற்று.
வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ்
பகுதிப்படுதலின், பன்மையால் கூறினார்.
அவையெல்லாம் செங்கோன்மை இல்வழி இலவாம்
என்பதாம். இவை நான்கு பாட்டானும்
கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.) --
மு.வ உரை:
அரசர்க்குக் புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும்.
அஃது இல்லையானால் அரசர்க்குப் புகழ் நிலைபெறாமல் போகும்.
G.U.Pope:
To rulers' rule stability is sceptre right;
When this is not, quenched is the rulers' light.
Explanation
Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.
மூலம்:
557 . துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
பரிமேழலகர் உரை:
துளி இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை
வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம்
பயக்கும்; அற்றே வேந்தன் அளியின்மை வாழும்
உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன்
தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு.
(சிறப்புப்பற்றி, 'துளி' என்பது மழைமேல் நின்றது:
"உயிர்" என்பது குடிகள்மேல் நின்றது. மேல் "வான்
நோக்கி வாழும்" என்றதனை எதிர்மறை முகத்தால்
கூறியவாறு.) ---
மு.வ உரை:
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ
அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய
அருள் இல்லாத ஆட்சி.
G.U.Pope:
As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that breathe.
Explanation
As is the world without rain, so live a people whose king is without kindness.
மூலம்:
558 . இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்.
பரிமேழலகர் உரை:
முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் - முறை
செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின்;
இன்மையின் உடைமை இன்னாது - யாவர்க்கும்
பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது.
(தனக்குரிய பொருளோடு அமையாது மேலும்
வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல்
முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின்,
அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை
இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும்
குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ்
இருக்கப்பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச்
செல்வநிலை துன்பமானதாகும்
G.U.Pope:
To poverty it adds a sharper sting,
To live beneath the sway of unjust king.
Explanation
Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.
மூலம்:
559 . முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
பரிமேழலகர் உரை:
மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான்
செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின்;
உறை கோடி வானம் பெயல் ஒல்லாது - அவன்
நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம்
பொழிதலைச் செய்யாது.
(இரண்டிடத்தும் 'கோடல்' என்பன திரிந்து நின்றன.
உறை கோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை.
அதற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.) ---
மு.வ உரை:
அரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில்
பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
G.U.Pope:
Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.
Explanation
If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.
மூலம்:
560 . ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
பரிமேழலகர் உரை:
காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன்
உயிர்களைக் காவானாயின்; ஆ பயன் குன்றும் - அறன்
இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்;
அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும்
நூல்களை மறந்துவிடுவர்.
(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன்.
அறுதொழிலாவன: ஒதல், ஓதுவித்தல், வேட்டல்,
வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால்
குன்றியவழி அவியின்மையானும், அது
கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன
ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே,
வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை
இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும்
குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால்
அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும்; அந்தணரும்
அறநூல்களை மறப்பர்.
G.U.Pope:
Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans' sacred lore will all forgotten lie.
Explanation
If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.