மூலம்:
151 . அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
பரிமேழலகர் உரை:
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை
அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப்
பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்;
மிகையாயின செய்தலும் சொல்லுதலும்).
மு.வ உரை:
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம்போல்,
தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
G.U.Pope:
As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.
Explanation
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.
மூலம்:
158 . மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
பரிமேழலகர் உரை:
மிகுதியான் மிக்கவை செய்தாரை - மனச்செருக்கால்
தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான்
வென்றுவிடல் - தாம் தம்முடைய பொறையான்
வென்றுவிடுக. (தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து
தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க
என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன
பொறுத்தல் சொல்லப்பட்டது.).
மு.வ உரை:
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய
பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும்.
G.U.Pope:
With overweening pride when men with injuries assail,
By thine own righteous dealing shalt thou mightily prevail.
Explanation
Let a man by patience overcome those who through pride commit excesses.
மூலம்:
157 . திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று.
பரிமேழலகர் உரை:
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - செய்யத்தகாத
கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்;
நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று -
அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான்
அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்
ஒருவனுக்கு நன்று. [உம்மை: சிறப்பு உம்மை.
துன்பத்திற்கு நோதலாவது "உம்மை - எரிவாய் நிரயத்து
வீழ்வர்கொல்" (நாலடி. 58) என்று பரிதல்.].
மு.வ உரை:
தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும்,
அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து அறம்
அல்லாதவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
G.U.Pope:
Though others work thee ill, thus shalt thou blessing reap;
Grieve for their sin, thyself from vicious action keep!
Explanation
Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.
மூலம்:
156 . ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.
பரிமேழலகர் உரை:
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் - தமக்குத் தீங்கு
செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு
நாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும்
துணையும் புகழ் - அதனைப் பொறுத்தார்க்கு உலகம்
அழியுமளவும் புகழ் உண்டாம். [ஒருநாளை இன்பம்
அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத்
தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம்
பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய
'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது].
மு.வ உரை:
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள்
இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ்
உண்டு.
G.U.Pope:
Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.
Explanation
The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.
மூலம்:
155 . ஒறுத்தாரை ஒன்றாக வையாரே: வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.
பரிமேழலகர் உரை:
ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் தமக்குத் தீங்கு
செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை
அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்;
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் -
அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து
கொள்வர். (ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு
செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார்.
'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி
இடைவிடாது நினைத்தல்.).
மு.வ உரை:
(தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார்
ஒரு பொருளாக மதியார்; ஆனால் பொறுத்தவரைப் பொன்போல்
மனத்துள் வைத்து மதிப்பர்.
G.U.Pope:
Who wreak their wrath as worthless are despised;
Who patiently forbear as gold are prized.
Explanation
(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.
மூலம்:
154 . நிறையுடமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
பரிமேழலகர் உரை:
நிறை உடைமை நீங்காமை வேண்டின்-ஒருவன்
சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை
வேண்டுவானாயின்; பொறை உடைமை போற்றி
ஒழுக்கப்படும்-அவனால் பொறை உடைமை தன்கண்
அழியாமல் காத்து ஒழுகப்படும். (பொறை
உடையானுக்கு அல்லது சால்பு இல்லை என்பதாயிற்று.
இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது
சிறப்புக் கூறப்பட்டது.).
மு.வ உரை:
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு
நீங்காமலிருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக
வேண்டும்.
G.U.Pope:
Seek'st thou honour never tarnished to retain;
So must thou patience, guarding evermore, maintain.
Explanation
If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience.
மூலம்:
153 . இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
பரிமேழலகர் உரை:
இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு
வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை
ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை
மடவார்ப் பொறை-அதுபோல வன்மையுள் வைத்து
வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப்
பொறுத்தல். [இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன்
அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை
ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும்
மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.].
மு.வ உரை:
வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்;
வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப்
பொறுத்தலாகும்.
G.U.Pope:
The sorest poverty is bidding guest unfed depart;
The mightiest might to bear with men of foolish heart.
Explanation
To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.
மூலம்:
152 . பொறுத்தல் இறப்பினை என்றும்: அதனை
மறத்தல் அதனினும் நன்று.
பரிமேழலகர் உரை:
என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை
நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும்
பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல்
அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே
மறத்தல் பெறின்அப்பொறையினும் நன்று. ('மிகை'
என்றது மேற்சொல்லிய இரண்டினையும்
பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை
'அதனினும் நன்று' என்றார்).
மு.வ உரை:
வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்.
அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல்
பொறுத்தலைவிட நல்லது.
G.U.Pope:
Forgiving trespasses is good always;
Forgetting them hath even higher praise;
Explanation
Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.
மூலம்:
159 . துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
பரிமேழலகர் உரை:
துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண்
நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்;
இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் -
நெறியைக் கடந்தார் வாய் இன்னாச் சொல்லைப்
பொறுப்பவர். (தூய்மை : மனம் மாசு இன்மை. 'வாய்'
என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது'
எனத் தாம் வேண்டியதன் இழிவு முடித்தற்கு.).
மு.வ உரை:
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப்
பொறுத்துக் கொள்பவர் துறந்தவரைப் போலத் தூய்மையானவர்
ஆவர்.
G.U.Pope:
They who transgressors' evil words endure
With patience, are as stern ascetics pure.
Explanation
Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.
மூலம்:
160 . உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
பரிமேழலகர் உரை:
உண்ணாது நோற்பார் பெரியர் - விரதங்களான்
ஊணைத்தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார்
எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச்சொல்
நோற்பாரின் பின்- அவர் பெரியராவது, தம்மைப் பிறர்
சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின்
(பிறர் - அறிவிலாதார். நோலாமைக்கு ஏது ஆகிய
இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச்
சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு
பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல்
கூறப்பட்டது.).
மு.வ உரை:
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ்
சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர்
ஆவர்.
G.U.Pope:
Though 'great' we deem the men that fast and suffer pain,
Who others' bitter words endure, the foremost place obtain.
Explanation
Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.