மூலம்:
1251 . காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎன்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
பரிமேழலகர் உரை:
நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும்,'
என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு - நாணாகிய
தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை; காமக்
கணிச்சி உடைக்கும் - காம வேட்கையாகிய கணிச்சி
முரியாநின்றது; இனி அவை நிற்றலும் இல்லை, யான்
ஆற்றலும் இல்லை.
(கணிச்சி - குந்தாலி. நானுள்ள துணையும்
நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும், அகத்துக்
கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக்
கதவாக்கியும், வலியவாய்த் தாமாக நீங்காத
அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின், தன் காம
வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள்.) ---
மு.வ உரை:
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும்
கதவைக் காமம் ஆகிய கோடரி உடைத்து விடுகின்றது,
G.U.Pope:
Of womanly reserve love's axe breaks through the door,
Barred by the bolt of shame before.
Explanation
The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.
மூலம்:
1252 . காமம் எனஒன்றோ கண்ணின்றுஎன் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
பரிமேழலகர் உரை:
நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால்
அடக்கப்படும்' என்றாட்குச் சொல்லியது. யாமத்தும்
என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் - எல்லாரும்
தொழிலொழியும் இடையாமத்தும் என் நெஞ்சத்தை
ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது; காமம் என
ஒன்று கண் இன்று - ஆகலாற் காமம் என்று
சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது.
('ஓ' என்பது இரக்கக் கூறிப்பு.
தொழிலின்கண்ணேயாடல் ?- தலைமகன்பாற்
செலவிடுத்தல் தாயைப் பணி கோடல்
உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும், அது
தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின்
'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை
கூறியவாறு.) ---
மு.வ உரை:
காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது;
அஃது என் நெஞ்சத்தை நள்ளிரவிலும் ஏவல் கொண்டு ஆள்கின்றது.
G.U.Pope:
What men call love is the one thing of merciless power;
It gives my soul no rest, e'en in the midnight hour.
Explanation
Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.
மூலம்:
1253 . மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்புஇன்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
பரிமேழலகர் உரை:
'மகளிர் காமம் மறைக்கப்படும்,' என்றாட்குச்
சொல்லியது. காமத்தை யான் மறைப்பேன் -
இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்;
குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் -
அதனாலென், இஃது என் கருத்தின் வாராது
தும்மல்போல வௌ¢ப்பட்டே விடா நின்றது.
('மன்' ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் -
இரங்கற்கண் வந்தது. தும்மல் அடங்காதாற்போல
அடங்குகின்றதில்லை" என்பதாம்.) ---
மு.வ உரை:
யான் காமத்தை என்னுள் மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே
என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல்போல் தானே வெளிப்பட்டு
விடுகின்றது.
G.U.Pope:
I would my love conceal, but like a sneeze
It shows itself, and gives no warning sign.
Explanation
I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.
மூலம்:
1254 . நிறைஉடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறைஇறந்து மன்று படும்.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. யான் நிறையுடையேன் என்பேன் -
இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன்
என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து
மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து
மன்றின்கண் வௌ¢ப்படா நின்றது.
(மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன. மன்று
படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து
அன்று' என்பதாம்.) ---
மு.வ உரை:
யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக்
கொண்டிருந்தேன்; ஆனால், என் காமம் என்னுள்
மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.
G.U.Pope:
In womanly reserve I deemed myself beyond assail;
But love will come abroad, and casts away the veil.
Explanation
I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.
மூலம்:
1255 . செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதுஒன்று அன்று.
பரிமேழலகர் உரை:
'நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம்,'
என்றாட்குச் சொல்லியது. செற்றார்பின் செல்லாப்
பெருந்தகைமை. தம்மை அகன்று சென்றார்பின்
செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை;
காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காம
நோயினை உறாதார் அறிவதொன்று அன்றி, உற்றார்
அறிவதொன்று அன்று.
(இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு
கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின்
சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல்.
பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காமநோய்
உறாதார் . மானம் உடையார். 'நன்று என உணரார்
மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று
அன்று,' என்பதாம்.) ---
மு.வ உரை:
தம்மை வெறுத்து நீங்கியவரின்பின் செல்லாமல் மானத்தோடு
நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது
அன்று.
G.U.Pope:
The dignity that seeks not him who acts as foe,
Is the one thing that loving heart can never know.
Explanation
The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.
மூலம்:
1256 . செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றுஎன்னை உற்ற துயர்.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. செற்றவர் பின் சேறல் வேண்டி -
என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை
வேண்டதலான்; என்னை உற்ற துயர் எற்று அளித்து -
என்னை உற்ற துயர் எத்தன்மையது? சால நன்று.
'செற்றவர்' என்றது ஈண்டும் அப்பொருட்டு 'வேண்ட'
என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றது. 'அளித்து'
என்பது, இகழ்ச்சிக் குறிப்பு. 'இக் காமநோய் யான்
சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று;
சாலக்கொடிது,' என்பதாம்.) ---
மு.வ உரை:
வெறுத்து நீங்கிய காதலரின்பின் செல்ல விரும்பிய நிலையில்
இருப்பதால் என்னை அடைந்த இந்தக்காமநோய் எத்தன்மையானது?
அந்தோ?
G.U.Pope:
My grief how full of grace, I pray you see!
It seeks to follow him that hateth me.
Explanation
The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?
மூலம்:
1257 . நாண்என ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
பரிமேழலகர் உரை:
பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனோடு
நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக்
காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது.
பேணியார் காமத்தாற் பெட்ப செயின் - நம்மால்
விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம்
விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என
ஒன்றோ அறியலம் - நாண் என்றொன்றையும் அறிய
மாட்டேமாயிருந்தோம்.
('பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல்
போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை
மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் -
பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல்.
'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு.
இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது.
நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி,
அவளையும் உளப்படுத்தாள்.) ---
மு.வ உரை:
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச்
செய்வாரானால், நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும்
அறியாமலிருப்போம்.
G.U.Pope:
No sense of shame my gladdened mind shall prove,
When he returns my longing heart to bless with love.
Explanation
I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).
மூலம்:
1258 . பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. நம் பெண்மை உடைக்கும் படை - நம்
நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக்
கள்வன் பணி மொழியன்றோ - பல பொய்களை வல்ல
கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது
நிற்குமாறென்னை?
(பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல்
நின்றது. 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும்,
'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும்
நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக்
கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக் கண்
தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான்
என்பாள், 'பல் மாயக் கள்வன்' என்றாள். பணிமொழி
தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ்
சொற்கள். 'அவன் அத்தன்மையனாக, சொற்கள்
அவையாக, நம் நிறையழியாது ஒழியுமோ?'
என்பதாம்.) ---
மு.வ உரை:
நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக
இருப்பது. பலமாயங்களில் வல்ல கள்வனான காதலருடைய
பணிவுடைய மொழி அன்றோ?
G.U.Pope:
The words of that deceiver, versed in every wily art,
Are instruments that break through every guard of woman's heart!
Explanation
Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?
மூலம்:
1259 . புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த
பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன்
நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம்
கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என்
நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு
கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது
வாயாது' என்று புல்லினேன்.
(வாயாமை புலத்தற்கருவியாய நெஞ்சு தானே
கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.) ---
மு.வ உரை:
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என்
நெஞ்சம் என்னைவிட்டு அவரோடு கூடுவதைக் கண்டு தழுவினேன்.
G.U.Pope:
'I 'll shun his greeting'; saying thus with pride away I went:
I held him in my arms, for straight I felt my heart relent.
Explanation
I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!
மூலம்:
1260 . நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல்.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. நிணம் தீயில் இட்டன்ன
நெஞ்சினார்க்கு - நிணத்தைத் தீயின்கண்ணே
யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம்
காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும்
நெஞ்சினையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி
நிற்பேம் எனல் உண்டோ அவர் புணர யாம் ஊடிப்
பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று
கருதுதல் உண்டாகுமோ? ஆகாது.
(புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்;
எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத்
திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின்
எனக்கு அஃது இல்லையாயிற்று,' என்பதாம்.) ---
மு.வ உரை:
G.U.Pope:
'We 'll stand aloof and then embrace': is this for them to say,
Whose hearts are as the fat that in the blaze dissolves away?
Explanation
Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?