மூலம்:
1201 . உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
பரிமேழலகர் உரை:
தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன்
சொல்லியது. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
- முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி
நினைத்தாலும் அது பொழுது பெற்றாற்போல நீங்காத
மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம்
இனிது - உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத
கள்ளினும் காமம் இன்பம் பயத்தல் உடைத்து.
(தன் தனிமையும், தலைமகளை மறவாமையும்
கூறியவாறு.) ---
மு.வ உரை:
நினைந்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால்
(உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும்) கள்ளைவிடக் காமம்
இன்பமானதாகும்.
G.U.Pope:
From thought of her unfailing gladness springs,
Sweeter than palm-rice wine the joy love brings.
Explanation
Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.
மூலம்:
1202 . எனைத்துஒன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதுஒன்று இல்.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று
இல்தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண்
நினைத்தால் அந் நினைவார்க்கு அப்பிரிவின்
வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து
இனிது ஒன்றே காண் - அதனால் காமம்
எத்துணையேனும் இனிதொன்றே காண்.
(புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான்,
'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை,
விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை
கூறியவாறு.) ---
மு.வ உரை:
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால்
வரக்கூடிய துன்பம் இல்லாமற் போகின்றது! அதனால் காமம்
எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.
G.U.Pope:
How great is love! Behold its sweetness past belief!
Think on the lover, and the spirit knows no grief.
Explanation
Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.
மூலம்:
1203 . நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
பரிமேழலகர் உரை:
தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள்
தோழிக்குச் சொல்லியது. தும்மல் சினைப்பது போன்று
கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக்
கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் -
அதனால் காதலர் என்னை நினைப்‘ர் போன்று
நினையாராகல் வேண்டும்.
(சினைத்தல்: அரும்புதல். சேய்மைக்கண்ணராய
கேளிர் நினைந்துழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல்
தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன்
எடுத்துக் கொண்ட வினை முடிவது போன்று
முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று.) ---
மு.வ உரை:
தும்மல் வருவதுபோலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என்
காதலர் என்னை நினைப்பவர்போலிருந்து நினையாமல்
விடுகின்றாரோ?
G.U.Pope:
A fit of sneezing threatened, but it passed away;
He seemed to think of me, but do his fancies stray?
Explanation
I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.
மூலம்:
1204 . யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே -
எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழுதும் உளரேயாய்
இராநின்றார்; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் -
அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும்
உளமாதுமோ, ஆகேமோ?
(ஓகார இடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்தி
நின்றது. 'உளமாயும், வினை முடியாமையின்
வாராராயினாரோ, அது முடிந்தும் இலமாகலின்
வாராராயினாரோ?' என்பது கருத்து.) ---
மு.வ உரை:
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! (அது
போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல்
இருக்கின்றோமோ?
G.U.Pope:
Have I a place within his heart!
From mine, alas! he never doth depart.
Explanation
He continues to abide in my soul, do I likewise abide in his ?
மூலம்:
1205 . தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்?
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் -
தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல்
எம்மைக் காவல் கொண்ட காதலர்; எம் நெஞ்சத்து
ஓவா வரல் நாணால்கொல் - தாம் எம்முடைய
நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணால்கொல்லோ?
(ஒருவரைத் தம்கண் வருதற்கு ஒருகாலும்
உடம்படாது, தாம் அவர்கண் பலகாலுஞ்சேறல்
நாணுடையார் செயலன்மையின், 'நாணார்கொல்'
என்றான்.) ---
மு.வ உரை:
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர்,
எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வருவதைப்பற்றி
நாணமாட்டாரோ!
G.U.Pope:
Me from his heart he jealously excludes:
Hath he no shame who ceaseless on my heart intrudes?
Explanation
He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.
மூலம்:
1206 . மற்றுயான் என்உளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன்.
பரிமேழலகர் உரை:
அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து
இறந்துபாடடெய்தா நின்றாய்; அது மறத்தல்
வேண்டும்,' என்றாட்குச் சொல்லியது. யான் அவரொடு
உற்ற நான் உள்ளே உளேன் - யான் அவரோடு புணர்ந்த
ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப
வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்; மற்று யான்
என்னுளேன் - அது இன்றாயின், வேறு எத்தால் உயிர்
வாழ்வேன் ?
(நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள,
அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன்
ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன் தூது வருதல்,
தன் தூது சேறல் முதலாயின. 'அவை யாவும்
இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு
இல்லை,' என்பது கருத்து.) ---
மு.வ உரை:
காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை
நினைத்துக்கொள்வதால்தான் உயிரோடிருக்கின்றேன்; வேறு
எதனால் உயிர்வாழ்கின்றேன்?
G.U.Pope:
How live I yet? I live to ponder o'er
The days of bliss with him that are no more.
Explanation
I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?
மூலம்:
1207 . மறப்பின் எவன்ஆவன் மற்கொல்? மறப்புஅறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம்
சுடும் அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று
உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடா நின்றது;
மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான்
மறந்தால் இறந்த படாது உளேனாவது எத்தால்?
(மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது 'மண்'
ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்:
அசை நிலை.) ---
மு.வ உரை:
(காதலரை) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத்
துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்துவிட்டால் என்ன
ஆவேனோ?
G.U.Pope:
If I remembered not what were I then? And yet,
The fiery smart of what my spirit knows not to forget!
Explanation
I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?
மூலம்:
1208 . எனைத்து நினைப்பினும் காயார் அனைத்துஅன்றோ
காதலர் செய்யும் சிறப்பு !
பரிமேழலகர் உரை:
இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம்
செய்வர்,' என்றாட்குச் சொல்லியது. எனைத்து
நினைப்பினும் காயார் - தம்மை யான் எத்துணையும்
மிக நினைத்தாலும் அதற்கு வெகுளார்; காதலர்
செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ - காதலர் எனக்குச்
செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ?
(வெகுளாமை: அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண்
நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது
இன்மையின், அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர்
நம்மாட்டருள்' என்றும், 'செய்யுங் குணம்' என்றும்
பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக்
குறிப்பான் இகழ்வது கூறியவாறு. ---
மு.வ உரை:
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல்
சினங் கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி
அத்தன்மையானது அன்றோ!
G.U.Pope:
My frequent thought no wrath excites. It is not so?
This honour doth my love on me bestow.
Explanation
He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ?
மூலம்:
1209 . விளியும்என் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளிஇன்மை ஆற்ற நினைந்து.
பரிமேழலகர் உரை:
தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள்,
வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. வேறு அல்லம்
என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம்
'நாம் இருவரும் வேறல்லம்,' என்று சொல்லுவாரது
அளியின்மையை மிகவும் நினைந்து; என் இன்னுயிர்
விளியும் - எனது இனிய உயிர் கழியாநின்றது.
(அளியின்மை, பின் வருவராதலுமாய்ப் பிரிதலும்,
பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது
விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என
வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு
அன்று; அவரன்பின்மைக்கு,' என எதிர்அழிந்து
கூறியவாறு.) ---
மு.வ உரை:
G.U.Pope:
Dear life departs, when his ungracious deeds I ponder o'er,
Who said erewhile, 'We're one for evermore'.
Explanation
My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.
மூலம்:
1210 . விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி !
பரிமேழலகர் உரை:
வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால்
சொல்லியது. மதி - மதியே; விடாது சென்றாரைக்
கண்ணினால் காணப்படாதி - என் நெஞ்சின்
இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என்
கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ
படாதொழிவாயாக.
(கண்ணளவான் எதிர்ப்படுதலாவது: மதி இருவரானும்
நோக்கப்படுதலின் இருவர் கண்ணும் அதன்கண்ணே
சேர்தல். முதலொடு சினைக்கு ஒற்றுமை
உண்மையின், 'சென்றாரைக் காண' என்றும்,
குறையுறுகின்றாளாகலின், 'வாழி' என்றும் கூறினாள்.
இனிப் 'படாது' என்பது பாடமாயின்; கனவிடைக்
கண்ணினாற் காணுமாறு மதிப்படுகின்றதில்லை என
அதனால் துயில பெறாது வருந்துகின்றாள் கூற்றாக்குக.
இப்பொருட்கு 'வாழி' என்பது அசைநிலை.) ---
மு.வ உரை:
திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை
என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல்
இருப்பாயாக!
G.U.Pope:
Set not; so may'st thou prosper, moon! that eyes may see
My love who went away, but ever bides with me.
Explanation
May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.