மூலம்:
1191 . தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
பரிமேழலகர் உரை:
'காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர்;
நீ அவரோடு பேரின்பம் நுகர்தி,' என்ற தோழிக்குச்
சொல்லியது. தாம் வீழப் பெற்றவர் - தம்மாற்
காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப் பெற்ற
மகளிர்; பெற்றோரே காமத்துக் காழ்இல் கனி -
பெற்றாரன்றே காமநுகர்ச்சி என்னும் பரல் இல்லாத
கனியை.
(காமம்: ஆகுபெயர். 'அத்து' அல்வழிக்கண் வந்தது,
முன்னை நல்வினை இல்வழிப் பெறப்படாமையின்
'பெற்றார்' என்றும், அவரால் தடையின்றி
நுகரப்படுதலின் 'காழில் கனி' என்றும் கூறினாள். 'நம்
காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும்
உடைமையின் அக்கனியாம் பெற்றிலேன்,'
என்பதாயிற்று.) ---
மு.வ உரை:
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர்,
காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப்
பெற்றவரே ஆவர்.
G.U.Pope:
The bliss to be beloved by those they love who gains,
Of love the stoneless, luscious fruit obtains.
Explanation
The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?
மூலம்:
1192 . வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி -
அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை
இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக்
கணவர் அளவறிந்து வந்து செய்யும்
தலையளி;வாழ்வார்க்கு வானம் பயந்தற்று -
தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம்
அளவறிந்து பெய்தாற் போலும்.
('நம் காதலர் நம்மை விழையாமையின்,
அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி
அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு
உள்ளது,' என்பதாம்.) ---
மு.வ உரை:
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு,
உயிர்வாழ்கின்றவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப்
போன்றது.
G.U.Pope:
As heaven on living men showers blessings from above,
Is tender grace by lovers shown to those they love.
Explanation
The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.
மூலம்:
1193 . வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே -
தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு
ஏற்புடைத்து; வாழுநம் என்னும் செருக்கு - காதலர்
பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்;
வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும்
தருக்கு.
(நாம் அவரான் விழப்படாமையின், நமக்கு அமைவது
இறந்துபாடு' என்பதாம்.) ---
மு.வ உரை:
G.U.Pope:
Who love and are beloved to them alone
Belongs the boast, 'We've made life's very joys our own.'
Explanation
The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands).
மூலம்:
1194 . வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.
பரிமேழலகர் உரை:
'காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை
மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை
மகளிரால் நன்கு மதிக்கப்படுதி,' என்ற தோழிக்குச்
சொல்லியது. வீழப்படுவார் - கற்புடை மகளிரால் நன்கு
மதிக்கப்படுவாரும்; தாம் வீழ்வார் வீழப்படார் எனின்
கெழீஇயிலர் - தாம் விரும்பும் கணவரான் விரும்பப்
படாராயின் தீவினையாட்டியர்.
(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது.
கெழீஇயின்மை; நல்வினையின்மை; அஃது
அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று.
'தீவினையுடையேற்கு அந்நன்கு மதிப்பால்
பயனில்லை,' என்பதாம்.) ---
மு.வ உரை:
தாம்விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால்
விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர்
அல்லர்.
G.U.Pope:
Those well-beloved will luckless prove,
Unless beloved by those they love.
Explanation
Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.
மூலம்:
1195 . நாம்காதல் கொண்டார் நமக்குஎவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை?
பரிமேழலகர் உரை:
'அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து
ஆற்றினாய்,' என்ற தோழிக்குச் சொல்லியது. நாம்
காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப - நம்மால்
காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச்
செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை - அவ்வாறே
தாமும் நம்கண் காதல் செய்யாவழி.
(எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல்
உடைமையால் நாம் பெற்றது துன்பமே,' என்பதாம்.) -
--
மு.வ உரை:
நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல்
கொள்ளளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?
G.U.Pope:
From him I love to me what gain can be,
Unless, as I love him, he loveth me?
Explanation
He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?
மூலம்:
1196 . ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. காமம் ஒரு தலையான் இன்னாது -
மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை
ஒருதலைக் கண்ணேயாயின், அஃது இன்னாது;
காப்போல இருதலையானும் இனிது - காவினது
பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது.
(மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண்
வந்தன. கா - ஆகுபெயர். என்மாட்டு உண்டாய
வேட்கை அவர் மாட்டும் உண்டாயின், யான் இவ்வாறு
துன்பமுழத்தல் கூடுமோ?' என்பதாம்.) ---
மு.வ உரை:
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின்
பாரம்போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.
G.U.Pope:
Love on one side is bad; like balanced load
By porter borne, love on both sides is good.
Explanation
Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.
மூலம்:
1197 . பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றுஒழுகு வான் ?
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் -
காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல்
ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக்
கடவுள்; பருவரலும் பைதலும் காணான் கொல் -
அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும்
அறியான் கொல்லோ!
('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும்
நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண்
வேறுபட்டான்; இனி யான் உய்யுமாற என்னை?'
என்பதாம்.) ---
மு.வ உரை:
(காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும்
காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும்
வருத்தத்தையும் அறியானோ?
G.U.Pope:
While Kaman rushes straight at me alone,
Is all my pain and wasting grief unknown?
Explanation
Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?
மூலம்:
1198 . வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
பரிமேழலகர் உரை:
தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது.
வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால்
விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர்
இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர்
வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் -
வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை.
('காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது',
என்னும் கருத்தால் 'இன்சொல்' என்றாள். இழிவு
சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான்
வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர்
வாழாநின்றேன் என்பதாம்.)
மு.வ உரை:
தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில்
(பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப்போல்
வன்கண்மை உடையவர் இல்லை,
G.U.Pope:
Who hear from lover's lips no pleasant word from day to day,
Yet in the world live out their life,- no braver souls than they!
Explanation
There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.
மூலம்:
1199 . நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. நசைஇயார் நல்கார் எனினும் - என்னால்
நச்சப்பட்ட காதல் என்மாட்டு அன்பிலரேயாயினும்;
அவர் மாட்டு இசையும் செவிக்கு இனிய - அவர்
திறத்துயாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு
இனியவாம்.
(இழிவு சிறப்பு உம்மை, 'அவர் வாரார் என்னுஞ்
சொல்லாயினும் அமையும்,' என்பதுபட நின்றது.
'அதுவும் பெற்றிலேன்' என்பதாம்.) ---
மு.வ உரை:
யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்ய மாட்டார்
என்றாலும், அவரைப்பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு
இன்பமாக இருக்கின்றது.
G.U.Pope:
Though he my heart desires no grace accords to me,
Yet every accent of his voice is melody.
Explanation
Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.
மூலம்:
1200 . உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
பரிமேழலகர் உரை:
தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக்
கருதியாள் நெஞ்சோடு சொல்லியது. உறார்க்கு
உறுநோய் உரைப்பாய் நெஞ்சு - நின்னோடு உறாதார்க்கு
நின் நோயை உரைக்கலுற்ற நெஞ்சே; கடலைச் செறாய்
- நீ ஆற்றாயாயினும் அரிதாய அதனையொழிந்து,
நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க
முயல்வாயாய; அஃது எளிது.
(உரைக்கலுற்றது அளவிறந்த நோயகலானும், கேட்பார்
உறவினராகலானும், அது முடிவதொன்று அன்று;
முடிந்தாலும் பயன் இல்லை என்பது கருதாது,
முயலாநின்றாய் என்னும் குறிப்பான், 'வாழிய'
என்றாள்.) ---
மு.வ உரை:
நெஞ்சமே! நீ வாழிய ! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த
துன்பத்தைச் சொல்கின்றாய்! அதைவிட எளிதாகக் கடலைத்
தூர்ப்பாயாக.
G.U.Pope:
Tell him thy pain that loves not thee?
Farewell, my soul, fill up the sea!
Explanation
Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow).