மூலம்:
1171 . கண்தாம் கலுழ்வது எவன்கொலோ? தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
பரிமேழலகர் உரை:
'நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன; நீ
ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட
- இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக்
காதலரைக் காட்டலானன்றோ; கண தாம் கலுழ்வது
எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள்,
இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என்
கருதி?
('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள்
வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது
யாம் காட்டுதல் யாண்டையது?' என்பதாம்.) ---
மு.வ உரை:
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது;
அவ்வாறிருக்க, காட்டிய கண்கள் தாமே இப்போது அழுவது ஏன்?
G.U.Pope:
They showed me him, and then my endless pain
I saw: why then should weeping eyes complain?
Explanation
As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).
மூலம்:
1172 . தெரிந்துஉணரா நோக்கிய உண்கண் பரிந்துஉணராப்
பைதல் உழப்பது எவன்?
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. தெரிந்து உணரா நோக்கிய உண்கண் -
மேல் விளைவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை
நோக்கி நின்ற உண்கண்கள்; பரிந்து உணராப் பைதல்
உழப்பது எவன் - இன்று இது நம்மால் வந்ததாகலின்
பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது துன்பம்
உழப்பது என் கருதி? விளைவது: பிரிந்து போயவா
வாராமையின் காண்டற்கு அரியராய் வருத்துதல்.
முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது
வந்தவழிப் பொறுத்தலன்றேயுள்ளது? அதுவும்
செய்யாது வருந்துதல் கழிமடச் செய்கை என்பதாம். ---
மு.வ உரை:
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள்,
இன்று அன்புகொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
G.U.Pope:
How glancing eyes, that rash unweeting looked that day,
With sorrow measureless are wasting now away!
Explanation
The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).
மூலம்:
1173 . கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்:
இதுநகத் தக்கது உடைத்து.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும்
இது - இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து
நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது;
நகத்தக்கது உடைத்து - நம்மால் சிரிக்கத்தக்க
இயல்பினை உடைத்து.
('கண்கள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது'
என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது
வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும்
ஆகலான் 'நகத்தக்கது உடைத்து' என்றாள்.) ---
மு.வ உரை:
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்துநோக்கி இன்று தாமே
அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.
G.U.Pope:
The eyes that threw such eager glances round erewhile
Are weeping now. Such folly surely claims a smile!
Explanation
They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?
மூலம்:
1174 . பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண் உயல்ஆற்றா
உய்வுஇல்நோய் என்கண் நிறுத்து.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. உண்கண் - உண்கண்கள்; உயலாற்றா
உய்வு இல் நோய் செய்வன; என் கண் நிறுத்து -
அன்று யான் உய்வ மாட்டாமைக்கு ஏதுவாய
ஒழிவில்ல த நோயை என் கண்ணே நிறுத்தி;
பெயலாற்றா நீர் உலந்த - தாமும் அழுதலை
மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன.
(நிறுத்தல்: பிரிதலும் பின்கூடாமையும் உடையாரைக்
காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு
இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே
வந்தன'' என்பதாம்.) ---
மு.வ உரை:
என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை
என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர்
வறண்டுவிட்டன.
G.U.Pope:
Those eyes have wept till all the fount of tears is dry,
That brought upon me pain that knows no remedy.
Explanation
These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up.
மூலம்:
1175 . படல்ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக்
காமநோய் செய்தஎன் கண்
பரிமேழலகர் உரை:
இதுவும் அது கடல் ஆற்றாக் காமநோய் செய்த என்கண்
- எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய
காமநோயைச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா
பைதல் உழக்கும் - அத் தீவினையால் தாமும்
துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன.
காமநோய் காட்சியான் வந்ததாகலின், அதனைக்
கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம்
அழுதலானாயது. ---
மு.வ உரை:
அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என்
கண்கள்,இன்று உறங்கமுடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.
G.U.Pope:
The eye that wrought me more than sea could hold of woes,
Is suffering pangs that banish all repose.
Explanation
Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness.
மூலம்:
1176 . ஓஒ இனிதே எமக்குஇந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. எமக்கு அந்நோய் செய்த கண் தாம்
இதன் பட்டது - எமக்கு அக் காமநோயினைச் செய்த
கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே
பட்டது; ஓஒஇனிதே - மிகவும் இனிதாயிற்று!
('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச்
சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது
தீர்ந்தாற்போன்றது' என்பதாம்.) ---
மு.வ உரை:
எமக்கு இந்தக் காமநோயை உண்டாக்கிய கண்கள், தாமும்
இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!
G.U.Pope:
Oho! how sweet a thing to see! the eye
That wrought this pain, in the same gulf doth lie.
Explanation
The eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh! I am much delighted.
மூலம்:
1177 . உழந்துதுழந்து உள்நீர் அறுக விழைந்துஇழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண் !
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. விழைந்து இழைந்து வேண்டி அவர்க்
கண்ட கண் - விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று
அவரைக் கண்ட கண்கள்; உழந்துழந்து உள்நீர் அறுக -
இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை
உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக.
(அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய
இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல்
நின்றது.) ---
மு.வ உரை:
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள இன்று
உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப்
போகட்டும்.
G.U.Pope:
Aching, aching, let those exhaust their stream,
That melting, melting, that day gazed on him.
Explanation
The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears.
மூலம்:
1178 . பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றுஅவர்க்
காணாது அமைவில கண்.
பரிமேழலகர் உரை:
காதலர் பிரிந்து போயினாரல்லர், அர் ஈண்டுளர்.
அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் வேண்டும்,' என்ற
தோழிக்குச் சொல்லியது. பேணாது பெட்டார் உளர் -
நெஞ்சால் விழையாது வைத்துச் சொல் மாத்திரத்தால்
விழைந்தவர் இவ்விடத்தே உளர்; மற்று அவர்க் கண்
காணாது அமைவில - அவ்வுண்மையாற் பயன் யாது,
அவரைக் கண்கள் காணாது அமைகின்றன
இல்லையாயின்?
(செயலாற் பிரிந்து நின்றமையின் 'பேணாது' என்றும்,
முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமம் வன்புறையும்
கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்'
ஒழியிசைக்கண் வந்தது. 'மற்று' வினை மாற்றின் கண்
வந்தது. 'ஓகாரம்' அசைநிலை 'யான் ஆற்றவும்,
கண்கள் அவரைக் காண்டற்கு விருமபாநின்றன:
என்பதாம். இனிக 'கொண்கனை' என்று பாடமாயின்,
'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற
கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை;
இவ்வாறே தம்மை யொருவர் விழையாதிருக்கத் தாம்
அவரை விழைந்தார் உலகத்துளரோ?' என்று உரைக்க.
இதற்கு மன் அசைநிலை) ---
மு.வ உரை:
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர்
ஒருவர் இருக்கின்றார். அவரைக் காணாமல் கண்கள்
அமைதியுறவில்லை.
G.U.Pope:
Who loved me once, onloving now doth here remain;
Not seeing him, my eye no rest can gain.
Explanation
He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.
மூலம்:
1179 . வாராக்கால் துஞ்சா: வரின்துஞ்சா: ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
பரிமேழலகர் உரை:
'நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல்
வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. வாராக்கால்
துஞ்சா - காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத்
துயிலா; வரின் துஞ்சா - வந்த ஞான்று, அவர்
பிரிவஞ்சித் துயிலா; ஆயிடைக் கண் ஆரஞர் உற்றன -
ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள்
பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய.
('ஆயிடை' எனச் சுட்டு நீண்டது. 'இனி அவற்றிற்குத்
துயில் ஒரு ஞான்றும் இல்லை' என்பதாம்.) ---
மு.வ உரை:
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும்
தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என்கண்கள் மிக்க துன்பத்தை
அடைந்தன.
G.U.Pope:
When he comes not, all slumber flies; no sleep when he is there;
Thus every way my eyes have troubles hard to bear.
Explanation
When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.
மூலம்:
1180 . மறைபெறல் ஊரார்க்கு அரிதுஅன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து.
பரிமேழலகர் உரை:
'காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர்
கொடுமையை மறைக்க வேண்டும்' என்ற தோழிக்குச்
சொல்லியது. எம் போல் அறைபறை கண்ணார் அகத்து
மறை பெறல் - எம்போலும் அறைபறையாகிய
கண்ணினையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய
மறையையறிதல்; ஊரார்க்கு அரிதன்று -
இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது.
('மறை' என்றது, ஈண்டு மறைக்கப்படுவதனை.
அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்கு
அறிவித்தலாகிய தொழிலான் ஒற்றுமை உண்மையின்,
'அறைபறையாகிய கண்' என்றாள். இங்ஙனம் செய்யுள்
விகாரமாக்காது, 'அறைபறைக் கண்ணார்' என்று பாடம்
ஓதுவாரும் உளர்; 'யான் மறைக்கவும் இவை
வெளிப்படுத்தா நின்றன' என்பதாம்.) ---
மு.வ உரை:
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை
உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை
அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.
G.U.Pope:
It is not hard for all the town the knowledge to obtain,
When eyes, as mine, like beaten tambours, make the mystery plain.
Explanation
It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.