மூலம்:
1161 . மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை: இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
பரிமேழலகர் உரை:
'காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது',
என்ற தோழிக்குச் சொல்லியது. நோயை யான்
மறைப்பேன் - இந்நோயைப் பிறரறிதல் நாணி யான்
மறையா நின்றேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர்
போல மிகும் - நிற்பவும், இஃது அந்நாண்வரை
நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்று
நீர் மிகு‘மறு போல மிகாநின்றது.
('அம்மறைத்தலால் பயன் என்?' என்பதுபட
நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.
''இஃதோ செல்வர்க் கொத்தனென் யான்''
என்புழிப்போல, ஈண்டு சுட்டுப் பெயர் ஈறு திரிந்து
நின்றது. 'இஃதோர் நோயை' என்று பாடம் ஓதுவாரும்
உளர்; அடு பாடமின்மை அறிக. 'இனி அதற்கடுத்தது நீ
செயல் வேண்டும்' என்பதாம்.) ---
மு.வ உரை:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான்மறைப்பேன்; ஆனால்,இது
இறைப்பவர்க்கு ஊற்றுநீர் மிகுவது போல் மிகுகின்றது.
G.U.Pope:
I would my pain conceal, but see! it surging swells,
As streams to those that draw from ever-springing wells.
Explanation
I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.
மூலம்:
1162 . கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
பரிமேழலகர் உரை:
'ஈண்டையார் அறியாமல் மறைத்தல், ஆண்டையார்
அறியத் தூது விடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று
செயல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது.)
இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன் - இந்நோயை
ஈண்டை அறியாமல் மறைத்தலும்
வல்லேனாகின்றிலேன்; நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும் - ஆகாக்கால், நோய்
செய்தவர்க்கு உரைக்க எனின், அதுவும் எனக்கு
நாணினைத் தாரா நின்றது; இனி என் செய்கோ?
(ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலின், 'கரத்தலும்
ஆற்றேன்' என்றும், சேயிடைச் சென்றவர்க்கு இது
சொல்லித் தூதுவிட்டால் இன்னும் இருந்தேன் என்பத
பயக்கும் என்னும் கருத்தால், 'நாணுத்தரும்' என்றும்
கூறினாள்.) ---
மு.வ உரை:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும்
முடியவில்லை; நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம்
தருகின்றது.
G.U.Pope:
I cannot hide this pain of mine, yet shame restrains
When I would tell it out to him who caused my pains.
Explanation
I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it.
மூலம்:
1163 . காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. காமமும் நாணும் - காமநோயும்
அதனைச் செய்தவர்க்கு உரைக்கல் ஒல்லாத நாணும்;
நோனா என் உடம்பின அகத்து - தம்மைப் பொறாத
என்னுடம்பின் கண்ணே; உயிர் காவாத் தூங்கும் -
உயிர் காத்தண்டாக அதன் இரு தலையிலும்
தூங்காநின்றன.
(பொறாமை மெலிவானாயது. 'தூங்கும்' என்பது,
ஒன்றினொன்று மிகாது இரண்டும் ஒத்த சீர என்பது
தோன்ற நின்றது. 'தூது விடவும் ஒழியவும்
பண்ணுவனவாய காம நாண்கள் தம்முள் ஒத்து
உயிரினை இறுவியா நின்றன. யான் அவற்றுள்
ஒன்றின்கண் நிற்கமாட்டாமையின், இஃது இற்றே
விடும்' என்பதாம்.) ---
மு.வ உரை:
துன்பத்தைப் பொறுக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில்
உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும்
இருபக்கமும் தொங்குகின்றன.
G.U.Pope:
My soul, like porter's pole, within my wearied frame,
Sustains a two-fold burthen poised, of love and shame.
Explanation
(Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them.
மூலம்:
1164 . காமக் கடல்மன்னும் உண்டே: அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
பரிமேழலகர் உரை:
'தலைவியர் காமக்கடற் படார், படினும், அதனை ஏற்ற
புணையான் நீந்திக் கடப்பார்' என்ற தோழிக்குச்
சொல்லியது. உண்டு காமக்கடலே - யாவர்க்கும்
உளவாய் வருகின்ற இவ் இரண்டனுள்ளும் எனக்கு
உண்டாகின்றது காமக்கடலே; அது நீந்தும் ஏமப்புணை
இல் - அதனை நீந்தும் அரணாகிய புனை இல்லை.
(இருவழியும் மன்னும் உம்மும் அசைநிலை.
'தூதுவிட்டு இதற்குப் புணையாகற் பாலையாய் நீயும்
ஆயிற்றிலை'' என்பது கருத்து.) ---
மு.வ உரை:
காமநோயாகிய கடல் இருக்கின்றது; ஆனால், அதை நீந்திக் கடந்து
செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.
G.U.Pope:
A sea of love, 'tis true, I see stretched out before,
But not the trusty bark that wafts to yonder shore.
Explanation
There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.
மூலம்:
1165 . துப்பின் எவன்ஆவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
பரிமேழலகர் உரை:
தூது விடாமை நோக்கித் தோழியோடு புலந்து
சொல்லியது நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர் -
இன்பஞ்செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பவரவினைச்
செய்ய வல்லவர்; துப்பின் எவனாவர் கொல் - துன்பம்
செய்தற்குரிய பகைமைக்கண் என் செய்வர் கொல்லோ?
(துப்புப் பகையுமாதல், ''துப்பெதிர்ந்தோர்க்கே யுள்ளாச்
சேய்மையன்'' நட்பெதிர்ந் தோர்க்கே அங்கை
யண்மையன்'' (புறநா.80) என்பதனானும் அறிக.
அப்பகைமை ஈண்டுக் காணாமையின், 'அவர் செய்வது
அறியப் பெற்றிலேம்' என்பதுபட நின்றமையின், மன்
ஒழியிசைக்கண் வந்தது. துயர் வருதலை
விலக்கலாயிருக்க அது செய்கின்றிலை எனப்
புலக்கின்றமையின், துயர் வரவு செய்தாளாக்கியும்
பிறளாக்கியும் கூறினாள்.) ---
மு.வ உரை:
(இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச்செய்ய வல்லவர்,(துன்பம்
தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன
ஆவாரே?
G.U.Pope:
Who work us woe in friendship's trustful hour,
What will they prove when angry tempests lower?
Explanation
He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity ?
மூலம்:
1166 . இன்பம் கடல்மற்றுக் காமம்: அஃதுஅடும்கால்
துன்பம் அதனிற் பெரிது.
பரிமேழலகர் உரை:
'காமத்தான் இன்பமுற்றார்க்கு அதனினாய துன்பமும்
வரும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. காமம் இன்பம்
கடல் - காமம் புணர்வால் இன்பஞ்செய்யுங்கால்
அவ்வின்பம் கடல்போலப் பெரிதாம்; மற்று அஃது
அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - இனி அது தானே
பிரிவால் துன்பஞ் செய்யுங்கால், அத்துன்பம்
அக்கடலினும் பெரிதாம்.
('மற்று' வினை மாற்றிக்கண் வந்தது. 'அடுங்கால்'
என வந்தமையின், மறுதலை யெச்சம்
வருவிக்கப்பட்டது. பெற்ற இன்பத்தோடு ஒத்துவரின்
ஆற்றலாம்; இஃது அதனது அளவன்று என்பது கருத்து.)
---
மு.வ உரை:
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது
வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.
G.U.Pope:
A happy love 's sea of joy; but mightier sorrows roll
From unpropitious love athwart the troubled soul.
Explanation
The pleasure of lust is (as great as) the sea; but the pain of lu st is far greater.
மூலம்:
1167 . காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
பரிமேழலகர் உரை:
'காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்,'
என்றாட்குச் சொல்லியது. காமக் கடும்புனல் நீந்திக்
கரை காணேன் - காமமாகிய கடல் நீந்தாதேனல்லேன்;
நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்; யாமத்தும்
யானே உளேன் - அக்காணாமைக் காலந்தான்
எல்லோரும் துயிலும் அரையிருளாயிற்று;
இருட்கண்ணும் அதற்கு ஒரு
துணையின்றியானேயாயினேன்; ஆயும்
இறந்துபட்டுய்ந்து போகாது உளனாகாநின்றேன்;
ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறென்
(கடுமை, ஈண்டு மிகுதிக்கண் நின்றது. உம்மை
முன்னும் கூட்டப்பட்டது. 'யானே ஆயினேன்' என்பது
'நீ துணையாயிற்றிலை' என்னும் குறிப்பிற்று.) ---
மு.வ உரை:
காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான்
காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்,
G.U.Pope:
I swim the cruel tide of love, and can no shore descry,
In watches of the night, too, 'mid the waters, only I!
Explanation
I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.
மூலம்:
1168 . மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்துஇரா:
என்அல்லது இல்லை துணை.
பரிமேழலகர் உரை:
இரவின் கொடுமை சொல்லி இரங்கியது. இரா அளித்து
- இரா அளித்தாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி
என்னல்லது துணை இல்லை - உலகத்து நிலை
பெறுகின்ற உயிர்களையெல்லாம் தானே துயிலப்
பண்ணுதலான், என்னையல்லாது வேறு துணை
உடைத்தாயிற்றில்லை.
('துயிற்றி' எனத் திரிந்துநின்ற வினையெச்சம் அவாய்
நிலையான் வந்த உடைத்தாதலோடு முடிந்தது.
'துணையோடு ஒன்றுகின்ற உயிர்களெல்லாம், விட்டு
இறந்துபடும் எல்லையேனாய என்னையே துணையாகக்
கோடலின், அறிவின்று' என்பது பற்றி, 'அளித்து'
என்றாள். இகழ்ச்சிக் குறிப்பு.) ---
மு.வ உரை:
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச்
செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை
இல்லாமலிருக்கின்றது.
G.U.Pope:
All living souls in slumber soft she steeps;
But me alone kind night for her companing keeps!
Explanation
The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.
மூலம்:
1169 . கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. இந்நாள் நெடிய கழியும் இரா -
காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற்
குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே
நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார்
கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது
கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யா நின்ற.
(தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்'
என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல் அவர்
பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக்
கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க்
கொடியவாகாநின்றன என்பதாம்.) ---
மு.வ உரை:
(பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க்
கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின்
கொடுமையைவிடத் தாம் கொடியவை.
G.U.Pope:
More cruel than the cruelty of him, the cruel one,
In these sad times are lengthening hours of night I watch alone.
Explanation
The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.
மூலம்:
1170 . உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
பரிமேழலகர் உரை:
'நின்="" கண்கள்="" பேரழகு=""
அழிகின்றனவாகலின்="" அழற்பாலையல்லை,=""
என்றாட்குச்="" சொல்லியது.="" உள்ளம்="" போன்று=""
உள்வழி="" செல்கிற்பின்="" -="" மனம்="" போலக்=""
காதலருள்ள="" தேயத்துக்="" கடிதிற்செல்ல=""
வல்லன="" ஆயின்;="" என்="" கண்="" வெள்ளநீர்=""
நீந்தல="" இங்ஙனம்="" வெள்ளமாகிய="" தம்=""
நீரை="" நீந்தா.=""
(அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு
நீந்துதலேயுள்ளது என்பதுபட நின்றமையின், 'மன்'
ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது
நினைவேயாகலின், 'உள்ளம் போன்று' என்றும்,
மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின் கண்கள்
அதனோடு சென்று காதலரைக் காண்டல் கூடாது
என்னும் கருத்தால் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள்.
இதனான் வருகின்ற அதிகாரமும் தோற்றுவாய்
செய்யப்பட்டது.) ---
மு.வ உரை:
காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல
முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில்
நீந்த வேண்டியதில்லை.
G.U.Pope:
When eye of mine would as my soul go forth to him,
It knows not how through floods of its own tears to swim.
Explanation
Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.