மூலம்:
1141 . அலர்எழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலர்அறியார் பாக்கியத் தால்.
பரிமேழலகர் உரை:
(அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகனைத் தோழி
அலர் கூறி வரைவு கடாயவழி அவன் சொல்லியது.) அலர் எழ
ஆர் உயிர் நிற்கும்-மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண்
அலராயெழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய
உயிர் பெற்றதுபோன்று நிலைபெறும்; அதனைப் பாக்கியத்தால்
பலர்அறியார் - அந்நிலை பேற்றைத் தெய்வத்தால் யானே
அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார். (அல்ல
குறிப்பட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தமெல்லாம்
தோன்ற, 'அரிய உயிர்' என்றும்,அங்ஙனம் அரியாளை
எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப்
பற்றுக்கோடாக நின்றது என்பான், 'அலர் எழ ஆருயிர் நிற்கும்'
என்றும், 'பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின்
தூற்றாது ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம், ஆகலான்,
அவரறியா தொழிகின்றது தெய்வத்தான்,' என்றும் கூறினான்.
முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.
மு.வ உரை:
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அரிய உயிர் போகாமல்
நிற்கின்றது; எம் நல்வினைப் பயனால் அதைப் பலரும்
அறியாமலிருக்கின்றனர்.
G.U.Pope:
By this same rumour's rise, my precious life stands fast;
Good fortune grant the many know this not!
Explanation
My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.
மூலம்:
1142 . மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர்எமக்கு ஈந்ததுஇவ் வூர்.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது -
மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை
அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை
எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது.
(அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது.
'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக்கோடாகலின், அலர்
கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.).
மு.வ உரை:
மலர்போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல்,
இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி
செய்தனர்.
G.U.Pope:
The village hath to us this rumour giv'n, that makes her mine;
Unweeting all the rareness of the maid with flower-like eyne.
Explanation
Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.
மூலம்:
1143 . உறாஅதோ ஊரறிந்த கௌவை? அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) ஊர் அறிந்த கௌவை உறாஅதோ - எங்கட்குக்
கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு
உறுவதொன்றன்றோ; அதனைப் பெறாது பெற்றன்ன நீர்த்து -
அது கேட்ட என் மனம் அக்கூட்டத்தைப் பெறாதிருந்தே
பெற்றாற்போலும் நீர்மையுடைத்து ஆகலான். (பெற்றன்ன
நீர்மை: பெற்றவழி உளதாம் இன்பம் போலும் இன்பமுடைமை.
'நீர்த்து' என்பதற்கு ஏற்ற 'மனம்' என்னும் வினைமுதல்
வருவிக்கப்பட்டது.).
மு.வ உரை:
ஊரார் எல்லாரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ?
(பொருந்தும்). அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றாற்போன்ற
நன்மை உடையதாக இருக்கின்றது.
G.U.Pope:
The rumour spread within the town, is it not gain to me?
It is as though that were obtained that may not be.
Explanation
Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).
மூலம்:
1144 . கவ்வையால் கவ்விது காமம்: அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது) காமம் கவ்வையால் கவ்விது - என் காமம்
இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று;
அது இன்றேல் தன்மை இழந்து தவ்வென்னும் - அவ்வலர்
இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும். (அலர்தல்:
மேன்மேல் மிகுதல். செவ்வையுடையதனைச் செவ்விது
என்றாற் போலக் கவ்வையுடையதனைக் 'கவ்விது' என்றார்.
இயல்பு: இன்பம் பயத்தல், 'தவ்வென்னும்' என்பது குறிப்பு
மொழி: 'நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென
றசைஇத் தாழ்துளி மறைப்ப' (நெடுநல்.184-85) என்புழியும்
அது.).
மு.வ உரை:
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று; அந்த
அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப்
போய்விடும்.
G.U.Pope:
The rumour rising makes my love to rise;
My love would lose its power and languish otherwise.
Explanation
Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away.
மூலம்:
1145 . களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) களித்தொறும் கள் உண்டல் வேட்டற்று -
கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு
போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது - எனக்குக் காமம்
அலராந்தோறும் இனிதாகா நின்றது. ('வேட்கப்பட்டடற்றால்'
என்பது 'வேட்டற்றால்' என நின்றது. வேட்கை மிகுதியால்
அலரும் இன்பஞ் செய்யாநின்றது என்பதாம்.).
மு.வ உரை:
காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர்
கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற்
போன்றது.
G.U.Pope:
The more man drinks, the more he ever drunk would be;
The more my love's revealed, the sweeter 'tis to me!
Explanation
As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.
மூலம்:
1146 . கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.
பரிமேழலகர் உரை:
(இடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை
எய்தப்பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத்
தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது.)
கண்டது ஒரு நாள் - யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு
ஞான்றே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று -அதனினாய
அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர்
போன்று உலகமெங்கும் பரந்தது. (காரியத்தைக் காரணமாக
உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும்
மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர்
பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல்
வேண்டும்', என்பதாம்.).
மு.வ உரை:
காதலரைக் கண்டது ஒருநாள்தான்; அதனால் உண்டாகிய அலரோ,
திங்களைப் பாம்பு கொண்டசெய்தி போல் எங்கும் பரந்து விட்டது.
G.U.Pope:
I saw him but one single day: rumour spreads soon
As darkness, when the dragon seizes on the moon.
Explanation
It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.
மூலம்:
1147 . ஊரவர் கௌவை எருஆக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
பரிமேழலகர் உரை:
(வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன்
சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, ஊரவர் அலரும் அன்னை
சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும் எனச்
சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது.) இந்நோய் -
இக்காம நோயாகிய பயிர்; ஊரவர் கௌவை எருவாக அன்னை
சொல் நீராக நீளும் - இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர்
எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற
வெஞ்சொல் நீராக, வளராநின்றது. ('ஊரவர்' என்பது
தொழிலான் ஆணொழித்து நின்றது. ஏக தேச உருவகம்.
சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன
என்பதாம். வரைவானாதல் பயன்.).
மு.வ உரை:
இந்தக் காமநோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை
கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து
வளர்கின்றது.
G.U.Pope:
My anguish grows apace: the town's report
Manures it; my mother's word doth water it.
Explanation
This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.
மூலம்:
1148 . நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) கௌவையால் காமம் நுதுப்பேமெனல் -
ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று
கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால்
எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும்.
(மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய
அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.).
மு.வ உரை:
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல்,
நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.
G.U.Pope:
With butter-oil extinguish fire! 'Twill prove
Harder by scandal to extinguish love.
Explanation
To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.
மூலம்:
1149 . அலர்நாண ஒல்வதோ அஞ்சல்ஓம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
பரிமேழலகர் உரை:
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள்.
அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி
ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) அஞ்சல்
ஒம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை - தம்மை எதிர்ப்பட்ட
ஞான்று 'நின்னிற் பிரியேன் அஞ்சல் ஒம்பு' என்றவர் தாமே
இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்;
அலர் நாணா ஒல்வதோ - நாம் ஏதிலார் கூறும் அலருக்கு
நாணக் கூடுமோ? கூடாது. ('நாண' என்னும் வினையெச்சம்
'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு
முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல்
யாண்டையது'? என்பதாம்.).
மு.வ உரை:
அஞ்சவேண்டா என்று அன்று உறுதி கூறியவர் இன்று பலரும்
நாணும்படியாக நம்மைவிட்டுப் பிரிந்தால், அதனால் அலருக்கு
நாணியிருக்க முடியுமோ?
G.U.Pope:
When he who said 'Fear not!' hath left me blamed,
While many shrink, can I from rumour hide ashamed?
Explanation
When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal.
மூலம்:
1150 . தாம்வேண்டின் நல்குவர் காதலர்: யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.
பரிமேழலகர் உரை:
(தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச்
சொல்லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச்
சொல்லியது.) யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடுக்கும் -
உடன் போகற்கு ஏதுவாகல் நோக்கி யாம் பண்டே
விரும்புவதாய அலரை இவ்வூர்தானே எடாநின்றது; காதலர்
தாம் வேண்டின் நல்குவர் - இனிக் காதலர் தாமும் யாம்
வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர், அதனால்
இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது. (எச்ச உம்மை விகாரத்தால்
தொக்கது. 'நம்கண் காதல் உடைமையின் மறார்' என்பது
தோன்றக் 'காதலர்' என்றாள். இவ்விருபது பாட்டும் புணர்தல்
நிமித்தம்.).
மு.வ உரை:
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக் கூறுகின்றனர்.
அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை
உதவுவார்.
G.U.Pope:
If we desire, who loves will grant what we require;
This town sends forth the rumour we desire!
Explanation
The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him).