மூலம்:
1131 . காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி.
பரிமேழலகர் உரை:
(சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.)
காமம் உழந்து வருந்தினார்க்கு - அரியராய மகளிரோடு
காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற
ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி இல்லை - பண்டும்
ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு
வலியாவதில்லை. (ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை
அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். 'பண்டும்
ஆடவராயினார் இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை
அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான்,
இது பொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான், இனி
யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்', என்பது கருத்து.).
மு.வ உரை:
காமத்தால் துன்புற்று (காதலியின் அன்பு பெறாமல்)
வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையான
துணை வேறொன்றும் இல்லை.
G.U.Pope:
To those who 've proved love's joy, and now afflicted mourn,
Except the helpful 'horse of palm', no other strength remains.
Explanation
To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.
மூலம்:
1132 . நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து.
பரிமேழலகர் உரை:
('நாணுடைய நுமக்கு அது முடியாது', என மடல் விலக்கல்
உற்றாட்குச் சொல்லியது) நோனா உடம்பும் உயிரும் மடல்
ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும்
அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன;
நாணினை நீக்கி நிறுத்து - அதனை விலக்குவதாய நாணினை
அகற்றி. ('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின்,
செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் -
ஆகுபெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து.
அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்'
என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு.
'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து
கடிதிற்குறை நேர்தல் நோக்கி.).
மு.வ உரை:
(காதலியன் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என்
உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு மடலூரத்
துணிந்தன.
G.U.Pope:
My body and my soul, that can no more endure,
Will lay reserve aside, and mount the 'horse of palm'.
Explanation
Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.
மூலம்:
1133 . நாணொடு நல்லாண்மை பண்டுஉடையேன் இன்றுஉடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
பரிமேழலகர் உரை:
('நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது'
என்றாட்குச் சொல்லியது.) நாணொடு நல்லாண்மை பண்டு
உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு
உடையேன்; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் -
அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும்
மடலினை இன்று உடையேன். (நாண்: இழிவாயின
செய்தற்கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது
நிற்றல். 'அவை பண்டு உள்ளன: இன்று உள்ளது
இதுவேயாகலின் கடிதின் முடியும்', என்பதாம்.).
மு.வ உரை:
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; (காதலியைப்
பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே
உடையேன்.
G.U.Pope:
I once retained reserve and seemly manliness;
To-day I nought possess but lovers' 'horse of palm'.
Explanation
Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.
மூலம்:
1134 . காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.
பரிமேழலகர் உரை:
(நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப்
புணையாகலின்,அதனால் அவை நீங்குவன அல்ல என்றாட்குச்
சொல்லியது) நாணொடு நல்லாண்மை என்னும் புணை - யான்
தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும்
ஆகிய புணைகளை; காமக்கடும் புனல் உய்க்குமே - என்னிற
பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு போகாநின்றது.
(அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்கு,
'கடும்புனல்' என்றான். 'இப்புனற்கு அவை புணையாகா;
அதனான் அவை நீங்கும்', என்பதாம்.).
மு.வ உரை:
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும்
கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றது.
G.U.Pope:
Love's rushing tide will sweep away the raft
Of seemly manliness and shame combined.
Explanation
The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.
மூலம்:
1135 . தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
பரிமேழலகர் உரை:
('இவ்வாற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன'?
என்றாட்குச் சொல்லியது.) மாலை உழக்கும் துயர் மடலொடு -
மாலைப் பொழுதின்கண் அனுபவிக்கும் துயரினையும், அதற்கு
மருந்தாய மடலினையும், முன் அறியேன்; தொடலைக்
குறுந்தொடி தந்தாள் - இது பொழுது எனக்கு மாலை போலத்
தொடர்ந்த சிறு வளையினை உடையாள் தந்தாள். (காமம்
ஏனைப்பொழுதுகளினும் உளதேனும், மாலைக்கண் மலர்தல்
உடைமையின், 'மாலை உழக்கும் துயர்' என்றும், மடலும்
அது பற்றி வந்ததாகலின், அவ்விழிவும் அவளால் தரப்பட்டது
என்றும், அவள் தான் நீ கூறியதே கூறும் இளமையள் என்பது
தோன்ற, 'தொடலைக் குறுந்தொடி' என்றும் கூறினான்.
அப்பெயர் உவமைத்தொகைப்புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை, 'இவை அவள் தந்தனவாகலின் நின்னால்
நீங்கும்' என்பது கருத்து.).
மு.வ உரை:
மடலேறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை
மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்குத்
தந்தாள்.
G.U.Pope:
The maid that slender armlets wears, like flowers entwined,
Has brought me 'horse of palm,' and pangs of eventide!
Explanation
She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.
மூலம்:
1136 . மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்குஎன் கண்.
பரிமேழலகர் உரை:
('மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச்
சொல்லியது) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை
காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலைப் பொருந்தா;
யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால்
எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து
மடலூர்தலையே கருதாநிற்பேன். ('பேதை' என்றது பருவம்
பற்றி அன்று, மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை
என வேண்டா' என்பதாம்.).
மு.வ உரை:
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன்;
காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல்
இருக்கின்றன.
G.U.Pope:
Of climbing 'horse of palm' in midnight hour, I think;
My eyes know no repose for that same simple maid.
Explanation
Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.
மூலம்:
1137 . கடல்அன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்.
பரிமேழலகர் உரை:
('பேதைக்கு என் கண் படல் ஒல்லா', என்பது பற்றி
'அறிவிலராய மகளிரினும் அஃது உடையராய ஆடவரன்றே
ஆற்றற்பாலர்', என்றாட்குச் சொல்லியது.) கடல் அன்ன காமம்
உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின் - கடல்போலக் கரையற்ற
காம நோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது
ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல; பெருந்தக்கது இல் -
மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை. ('பிறப்பு
விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கு இல்லையாகா நின்றது, நீ
அஃது அறிகின்றிலை', என்பதாம், இத்துணையும் தலைமகன்
கூற்று. மேல் தலைமகள் கூற்று.).
மு.வ உரை:
கடல்போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தைப்
பொறுத்துக்கொண்டிருக்கும் பெண் பிறப்பைப் போல் பெருமையுடைய
பிறவி இல்லை.
G.U.Pope:
There's nought of greater worth than woman's long-enduring soul,
Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm'.
Explanation
There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.
மூலம்:
1138 . நிறைஅரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
பரிமேழலகர் உரை:
(காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது.)
நிறை அரியர் - இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர்
என்று அஞ்சுதல் செய்யாது; மன் அளியர் என்னாது - மிகவும்
அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது; காமம் மறை
இறந்து மன்றுபடும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக்
கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது.
('என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது
வருவிக்கப்பட்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது.
'மன்று'என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப்
பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம்
பெருகியவாறும், இனிஅறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும்
குறிப்பால் கூறியவாறாயிற்று ).
மு.வ உரை:
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும்
இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து
மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!
G.U.Pope:
In virtue hard to move, yet very tender, too, are we;
Love deems not so, would rend the veil, and court publicity!
Explanation
Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).
மூலம்:
1139 . அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன்
அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி
அவ்வாறு நில்லாது யானே வெளிப்பட்டு அறிவிப்பல் என்று
கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம்
இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது.
(மயங்குதல் - அம்பலாதல், மறுகுதல் - அலராதல், 'அம்பலும்
அலருமாயிற்று'. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்',
என்பதாம் 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.).
மு.வ உரை:
அமைதியாய் இருந்ததால் எல்லாரும் அறியவில்லை என்று கருதி
என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.
G.U.Pope:
'There's no one knows my heart,' so says my love,
And thus, in public ways, perturbed will rove.
Explanation
My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).
மூலம்:
1140 . யாங்கண்ணின் காண நகுப அறிவுஇல்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.
பரிமேழலகர் உரை:
(செவிலிக்கு அறத்தொடு நின்று வைத்து, 'யான் நிற்குமாறு
என்னை' என்று நகையாடிய தோழியோடு புலந்து தன்னுள்ளே
சொல்லியது,) யாம் கண்ணின்காண அறிவில்லார் நகுப - யாம்
கேட்குமாறுமன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை அறிவிலார்
நகாநின்றார்; யாம் பட்ட தாம்படாவாறு - அவர்
அங்ஙனஞ்செய்கின்றது யாம் உற்ற நோய்கள் தாம்
உறாமையான். ('கண்ணின்' என்றது, முன் கண்டறியாமை
உணர நின்றது. அறத்தொடு நின்றமை அறியாது வரைவு
மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின்,
ஏதிலாளாக்கிக் கூறினாள். இது, நகாநின்று சேண்படுக்குந்
தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால், அதிகாரத்திற்கு
ஏலாமை அறிக.).
மு.வ உரை:
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால், அறிவில்லாதவர்
யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக் கண்டு
நகைக்கின்றனர்.
G.U.Pope:
Before my eyes the foolish make a mock of me,
Because they ne'er endured the pangs I now must drie.
Explanation
Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.